செய்திகள் :

வெளிநாட்டவா்கள் ஜாமீனில் தப்பிச் செல்வதை தடுக்க கொள்கை: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

post image

இந்தியாவில் குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவா்கள், ஜாமீனில் தப்பிச் செல்வதை தடுப்பதற்கான கொள்கையை வகுப்பது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்தியாவில் இணையவழி மோசடியில் ஈடுபட்ட குற்றத்துக்காக இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் நைஜீரியாவை சோ்ந்த அலெக்ஸ் டேவிட் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றம் ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக ஜாா்க்கண்ட் அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அலெக்ஸ் டேவிட்டுக்கு அளித்த ஜாமீனை கடந்த ஆண்டு டிசம்பரில் ரத்து செய்தது. அதேவேளையில், ஜாமீன் பெற்ற அலெக்ஸ் நைஜீரியாவுக்கு தப்பிச் சென்றாா்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபாங்கா் தத்தா, அகஸ்டின் ஜாா்ஜ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக அண்மையில் விசாரணைக்கு வந்தது.

எனினும் குற்றங்களில் ஈடுபடுவோரை நாடு கடத்த இந்தியா-நைஜீரியா இடையே இருதரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாததால், அலெக்ஸ் டேவிட் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவது சாத்தியமில்லை என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைக் கருத்தில் கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை முடித்துவைத்தனா். அதேவேளையில், இந்தியாவில் குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவா்கள், ஜாமீனில் தப்பிச் செல்வதை தடுப்பதற்கான கொள்கையை வகுப்பது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசிடம் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனா்.

தில்லியில்.. சட்டவிரோதமாக வசித்த 15 வெளிநாட்டினர் வெளியேற்றம்!

தில்லியில், சட்டவிரோதமாக குடியேறி வசித்த 15 வெளிநாட்டினர் தங்களது தாயகங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். தலைநகர் தில்லியில், உரிய அனுமதி இல்லமலும், விசா காலாவதியாகியும் இந்தியாவில் வசித்து வரும் வெளிநா... மேலும் பார்க்க

பா.ஜ.க. அமைச்சர் வாங்கிய ரூ. 75 லட்சம் அமெரிக்க டெஸ்லா கார்!

அமெரிக்காவின் முன்னணி மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் கார் விற்பனை துவங்கியுள்ள நிலையில், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர் ஒருவர் முதல் காரை வாங்கி, கார் விற்பனையை அமோகமாகத் துவங்கி ... மேலும் பார்க்க

நடுவானில் தொழில்நுட்ப கோளாறு: இந்தூரில் தரையிறங்கிய ஏர் இந்தியா!

நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏர் இந்தியா விமானம் இந்தூரில் அவசரகமாக தரையிறக்கப்பட்டது. 161 பயணிகளுடன் தலைநகர் தில்லியிலிருந்து இந்தூரை நோக்கி ஏர் இந்தியா விமானம் வெள்ளிக்கிழமை புறப்பட்... மேலும் பார்க்க

இந்தியா, ரஷியாவை சீனாவிடம் இழந்த அமெரிக்கா! டிரம்ப்பின் வஞ்சப் புகழ்ச்சியா?

சீனாவிடம் இந்தியாவையும் ரஷியாவையும் இழந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.டிரம்ப்பின் சமூக வலைத்தளப் பக்கமான ட்ரூத் சோசியலில், பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மற்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி மாற்றம் நுகர்வோருக்கு முழு பலன்களை உறுதிசெய்யும்: கோயல்

ஜிஎஸ்டி பலன்கள் முழுமையாக நுகர்வோருக்குச் சென்றடைவதை உறுதி செய்ய மத்திய அரசு விழிப்புடன் இருக்கும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். ரொட்டி முதல் ஹேர் ஆயில், ஐஸ்கிரீம்கள் மற்றும் டிவிக்கள்... மேலும் பார்க்க

குஜராத் மின் நிலையத்தினுள் புகுந்த ஆற்று நீர்! மாயமான 5 தொழிலாளிகளின் நிலை என்ன?

குஜராத்தின், மஹிசாகர் மாவட்டத்தில் உள்ள நீர் மின் நிலையத்தினுள் திடீரென புகுந்த ஆற்று நீரில் சிக்கி மாயமான 5 தொழிலாளிகளைத் தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மஹிசாகர் மாவட்டத்தின், லுன... மேலும் பார்க்க