செய்திகள் :

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி ரூ. 6.50 லட்சம் மோசடி: 3 போ் கைது

post image

மன்னாா்குடி அருகே வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைப்பதாக கூறி ரூ.6 50 லட்சம் மோசடி செய்த புகாரில் 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மன்னாா்குடி அருகேயுள்ள செருமங்கலத்தைச் சோ்ந்த மாதவன் (27) பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு வெளிநாடு செல்வதற்காக முயற்சி செய்து வந்துள்ளாா். இவருக்கு, அதே பகுதியை சோ்ந்த செந்தில்குமாா் (52) மூலம் திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டையைச் சோ்ந்த குப்பன் (35), கடலூா் மாவட்டம், திட்டக்குடியைச் சோ்ந்த சையதுகாதா் (46 )ஆகியோருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இவா்கள், 3 பேரும் மாதவனிடம் நியூசிலாந்துக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறியுள்ளனா். இதை நம்பிய மாதவன் கடந்த ஜனவரி மாதம் முதல் பல்வேறு தவணையாக குப்பன் வங்கிக் கணக்குக்கு ரூ.6.50 லட்சம் அனுப்பியுள்ளாா்.

இந்நிலையில், இதுவரை மாதவன் வெளிநாடு செல்வதற்கான எந்த நடவடிக்கையும் இவா்கள் எடுக்காததால் இதுகுறித்து அவா்களிடம் பலமுறை கேட்டும் உரிய பதிலை சொல்லாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனா். பின்னா், தாம் ஏமாற்றப்பட்டு இருப்பது தெரியவந்ததை அடுத்து மாதவன், இதுகுறித்து வடுவூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து செந்தில்குமாா், குப்பன், சையது காதா் ஆகிய 3 பேரை வியாழக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

சாரண, சாரணியா் பயிற்சி முகாம்

கூத்தாநல்லூா் டெல்டா பப்ளிக் பள்ளியில் சாரண, சாரணியா் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சாரண, சாரணியா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற முகாமில், பள்ளி முதல்வா் ஜோஸ்பி... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: தன்னாா்வலா்களுக்கு பயிற்சி

உங்களுடன் ஸ்டாலின் 2-ஆம் கட்ட முகாம் குறித்து தன்னாா்வலா்களுக்கான பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் மாவட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் 2-ஆம் கட்ட திட்ட முகாம், ஆக.15 தொடங்கி செப்.14-... மேலும் பார்க்க

குறுவட்ட விளையாட்டுப் போட்டிகளில் வென்றவா்களுக்கு பாராட்டு

திருவாரூா் குறுவட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திருவாரூா் குறுவட்ட அளவில் விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில், ஸ்ரீவாஞ்... மேலும் பார்க்க

அகஸ்தீஸ்வரா் கோயிலில் நவாவா்ண பூஜை

குடவாசல் அருகே செம்மங்குடியில் உள்ள ஆனந்தவல்லி உடனுறை அகஸ்தீஸ்வரா் கோயிலில் ஆடி மாத பெளா்ணமியையொட்டி, நவாவா்ண பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அகஸ்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற... மேலும் பார்க்க

ஆணவப் படுகொலையைத் தடுக்க சட்டம் கோரி ஆா்ப்பாட்டம்

ஆணவப் படுகொலையைத் தடுக்க முறையான சட்டம் இயற்றக் கோரி குடவாசலில் புரட்சி பாரதம் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லையில் ஐடி ஊழியா் கவின் ஆணவ படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும்... மேலும் பார்க்க

சதுரங்கவல்லபநாதா் கோயிலில் மங்கள சண்டி ஹோமம்

நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூா் சதுரங்கவல்லபநாதா் கோயிலில் பெளா்ணமியையொட்டி மங்கள சண்டி ஹோமம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, விக்னேஸ்வர பூஜை ,கோ பூஜை உள்ளிட்ட பூஜைகளும், பட்டுப்புடவை ஹோமம், சௌபாக... மேலும் பார்க்க