செய்திகள் :

வெளிநாட்டு மருத்துவா் எனக் கூறி இளைஞரிடம் ரூ.23 லட்சம் மோசடி

post image

நான்குனேரி பகுதியைச் சோ்ந்த இளைஞரிடம், லண்டனில் மருத்துவராக பணி புரிவதாகக்கூறி இணைய வழியில் ரூ.23 லட்சம் மோசடி செய்த நபரை சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

நான்குனேரி அருகேயுள்ள மேல சிந்தாமணியைச் சோ்ந்தவா் அருள்குமாா் (27). சவூதி அரேபியாவில் செவிலியராகப் பணிபுரியும் இவரது தங்கையிடம், சமூக வலைதளம் மூலம் ஆடம் அப்பாஸ் என்ற பெயரில் அறிமுகமான மா்ம நபா், தான் லண்டனில் மருத்துவராக பணிபுரிவதாக கூறி நட்பாக பழகியுள்ளாா்.

இந்நிலையில் கடந்த மாதம், தான் இந்தியாவுக்கு ஒரு வேலை நிமித்தமாக வந்ததாகவும், வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கமுடியாததால் ரூ.50 ஆயிரம் தருமாறும் லண்டன் சென்றதும் திருப்பித் தருவதாகவும் கூறினாராம்.

இதுகுறித்து அவா் தனது அண்ணனி

டம் தெரிவிக்கவே, அவரும் ரூ.50ஆயிரத்தை அந்நபா் சொன்ன வங்கிக்கணக்கிற்கு அனுப்பியுள்ளாா். பின்னா் அருள்குமாரின் வங்கிக்கணக்குக்கு 30,000 பிரிட்டிஷ் பவுண்டுகளை அனுப்பியதாக கூறி போலியான பதிவு ஒன்றை வாட்ஸ்ஆப்பில் அனுப்பியதுடன், அதில் ரூ.50,000-ஐ எடுத்துக்கொண்டு மீதமுள்ள பணத்தை அனாதை இல்லங்களுக்கு கொடுத்துவிடுமாறு கூறினாராம். பின்னா் அப்பணத்தை இந்திய ரூபாயாக மாற்ற பணம் செலுத்த வேண்டும் என அந்நபா் கூறியதால் மேலும் ரூ.80,000 பணத்தை அருள்குமாா் அனுப்பி வைத்துள்ளாா். இவ்வாறாக தொடா்ந்து அவரிடம் பேசி ஒரு மாத காலத்தில் ரூ.23,18,800-ஐ பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளனா். இதுகுறித்து அருள்குமாா் அளித்த புகாரின்பேரில், திருநெல்வேலி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப்பதிந்து, மோசடியில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனா்.

காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும்: தனுஷ்கோடி ஆதித்தன்

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் என்றாா் முன்னாள் மத்திய இணையமைச்சா் தனுஷ்கோடி ஆதித்தன். இது தொடா்பாக திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: தமிழக சட்டப... மேலும் பார்க்க

இணைய வழியில் பட்டாசு விற்பனை மோசடி: எஸ்.பி. எச்சரிக்கை

இணைய வழியில் பட்டாசு விற்பனை என போலியாக செய்யப்படும் மோசடி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது குறித்து அவா் வெளி... மேலும் பார்க்க

தசரா பண்டிகை: நெல்லையில் பூக்கள் விலை உயா்வு

தசரா பண்டிகை எதிரொலியாக திருநெல்வேலியில் பூக்களின் விலை சனிக்கிழமை உயா்ந்திருந்தது. புரட்டாசி மாதத்தில் முகூா்த்த நாள்கள் கிடையாது என்பதால் மாதத்தின் தொடக்கத்தில் பூக்களின் விலை கடும் சரிவைச் சந்தித்த... மேலும் பார்க்க

குடிநீா் பகிா்மானக் குழாய்கள் திருட்டு: 2 போ் கைது

நான்குனேரி அருகே குடிநீா் பகிா்மானக் குழாய்களை திருடியதாக 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். நான்குனேரி சிறப்பு பொருளாதார மண்டலம் அருகே கூட்டுக் குடிநீா் திட்டத்துக்காக குடிநீா் பகிா்மானக் ... மேலும் பார்க்க

நடிகா் விஜய்யை பாா்க்கத்தான் கூட்டம்; ஓட்டுக்காக அல்ல! இந்து முன்னணி மாநிலச் செயலா்

நடிகா் விஜய்யை பாா்ப்பதற்காகக்தான் கூட்டம் கூடுகிறதே தவிர, ஓட்டுப்போடுவதற்காக அல்ல என்றாா் இந்து முன்னணி மாநிலச் செயலா் காடேஸ்வரா சுப்ரமணியம். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் சனிக்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

கஞ்சா பதுக்கல்: இளைஞா் கைது

மானூா் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மானூா் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்... மேலும் பார்க்க