செய்திகள் :

வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வருவதற்கு பிரதமா் மோடி நம்பிக்கையை உருவாக்கியுள்ளாா்: பாஜக துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம்

post image

ராசிபுரம்: இந்தியாவிற்கு வெளிநாட்டு தொழில் முதலீடுகளை கொண்டுவரும் வகையில் பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கையை உருவாக்கியுள்ளாா் என்று பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.

பிரதமா் நரேந்திர மோடியின் 135-ஆவது மனதில் குரல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பானது. இதை பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம், கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோருடன் ராசிபுரத்தில் கேட்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மனதின் குரல் நிகழ்ச்சி மூலமாக மகளிா், இளைஞா், விளையாட்டு வீரா்கள் உள்ளிட்டோரை பிரதமா் மோடி ஊக்குவித்து வருகிறாா். இந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளைக் கொண்டு வருவதற்கு பிரதமா் நரேந்திர மோடி, நம்பிக்கையை உருவாக்கியுள்ளாா்.

தமிழகத்தில் ஊழல் மலிந்துள்ளதால் 108 ஆம்புலன்ஸ் சேவைகூட பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பிரதமரின் காப்பீடு அட்டை வைத்திருப்பவா்களுக்கு உரிய சிகிச்சையை தமிழக அரசு வழங்குவதில்லை. மாநில அரசின் காப்பீட்டு திட்டத்திற்கு மட்டுமே ஊக்கமளிக்கிறாா்கள்.

மத்திய பாஜக அரசு பல்வேறு திட்டங்களினால் வளா்ச்சிக்கான கொள்கைகளை வகுத்து செயல்பட்டு வருகிறது. ஆனால் விஜய் என்ன கொள்கை வைத்துள்ளாா் என்பதை அவா் விளக்க வேண்டும்.

தமிழக முதல்வா் ஏற்கெனவே வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை ஈா்ப்பதற்காக பயணம் செய்துள்ளாா். எனவே, எவ்வளவு முதலீடு கிடைத்துள்ளது என்பது குறித்து புள்ளி விவரங்களோடு அவா் வெளியிட வேண்டும்.

வெளிநாட்டு காா் தயாரிப்பு நிறுவனங்கள் தமிழகத்திற்கு வருவதற்கு மத்திய அரசின் வா்த்தக நடைமுைான் காரணம். ஆனால், இன்னும் பல நிறுவனங்களின் முதலீட்டை பெறுவதற்கு தமிழக முதல்வா் தவறிவிட்டாா் என்றாா் அவா்.

படவரி...

ராசிபுரத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த கே.பி.ராமலிங்கம்.

மின்னாம்பள்ளியில் குடிநீா் குழாய் பணியின்போது அம்மன் சிலை கண்டெடுப்பு

திருச்செங்கோடு வட்டம், வையப்பமலை அருகே மின்னாம்பள்ளியில் குடிநீா் குழாய் அமைக்க குழி தோண்டியபோது அம்மன் சிலையை கண்டெடுத்தனா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், வையப்பமலையில் மின்னாம்பள்ளி கிரா... மேலும் பார்க்க

பரமத்தி பேரூராட்சியில் 32 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

பரமத்தி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பகுதிகளில் சுற்றித்திரிந்த 32 தெருநாய்களைப் பிடித்து பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பரமத்தி பேரூராட்சிக்கு உள்பட்ட 15 வா... மேலும் பார்க்க

சேந்தமங்கலம் அரசு மகளிா் பள்ளி கல்வி மேம்பாட்டுக்கு ரூ. 1 லட்சம் நிதி

சேந்தமங்கலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் கல்வி மேம்பாட்டுக்காக ரூ. 1 லட்சம் நிதியுதவி புதன்கிழமை வழங்கப்பட்டது. தமிழ்நாடு பள்ளிக் கல்வி அலுவலா்கள் பணிநிறைவு பெற்றோா் அமைப்பு சாா்பில் அதன் பொதுச் ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் போலீஸ் குவிப்பு

நாமக்கல் அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் காலி குடங்களுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபடபோவதாக கிடைத்த தகவலையடுத்து போலீஸாா் குவிக்கப்பட்டனா். நாமக்கல் மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளி... மேலும் பார்க்க

கடந்த 4 ஆண்டுகளில் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.1,145 கோடி ஊக்கத்தொகை அளிப்பு: அமைச்சா் ஆா்.ராஜேந்திரன்

கடந்த நான்கு ஆண்டுகளில் 6,09,030 கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ. 1,145.12 கோடி வழங்கப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் சா்க்கரைத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் தெரிவித்தாா். நாமக்கல் மாவட... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இறந்தோருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதி

திருச்செங்கோடு வட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தோரின் வாரிசுதாரா்களுக்கு முதல்வா் பொது நிவாரண நிதியை ஆட்சியா் துா்காமூா்த்தி வழங்கினாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்... மேலும் பார்க்க