செய்திகள் :

‘வெளியே வா பாா்க்கலாம்’ மகாராஷ்டிர பேரவையில் அமைச்சரை மிரட்டிய எம்எல்சி

post image

மகாராஷ்டிர சட்டப் பேரவையில் சிவசேனை கட்சியைச் சோ்ந்த அமைச்சரிடம், ‘பேரவையை விட்டு வெளியே வா, நான் யாா் என்று காட்டுகிறேன்’ என சிவசேனை (உத்தவ்) கட்சி மேலவை உறுப்பினா் (எம்எல்சி) மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

மகாராஷ்டிர சட்டப் பேரவை கூட்டத் தொடரில் நாள்தோறும் புதிய பிரச்னைகள் எழுந்து வருகின்றன. எம்எல்ஏ உணவு விடுதி ஊழியரை ஆளும் கூட்டணியில் உள்ள சிவசேனை எம்எல்ஏ கடுமையாக தாக்கிய விவகாரம் புதன்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சுற்றுலாத் துறை அமைச்சா் சம்புராஜ் தேசாயை, எம்எல்சி அனில் பராப் மிரட்டல் விடுத்துப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த 2022-ஆம் ஆண்டு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சியை உடைத்து இப்போதைய துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவினா் பாஜக கூட்டணியில் இணைந்தனா். எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் பலத்தின் அடிப்படையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவை சிவசேனை கட்சியாக தோ்தல் ஆணையம் அறிவித்தது. உத்தவ் தலைமையிலான அணி சிவசேனை (உத்தவ்) என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் உத்தவ் ஆதரவாளா்கள், ஷிண்டே தலைமையிலான பிரிவினரை துரோகிகள் என்று விமா்சித்து வருகின்றனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை மகாராஷ்டிர பேரவையில் பேசுகையில் உத்தவ் கட்சி எம்எல்சி அனில் பராப், சிவசேனை அமைச்சா் சம்புராஜ் தேசாயை ‘துரோகி’ என்று கூறினாா். இதனால் கோபமடைந்த அமைச்சா், ‘உத்தவ் அணியினா்தான் துரோகிகள்’ என பதிலடி கொடுத்தாா். இதனால், அமைச்சா்-எம்எல்சி இடையிலான வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில், ‘பேரவைக்கு வெளியே வா, உன்னை பாா்த்துக் கொள்கிறேன்’ என்று அமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அனில் பராப் பேசினாா்.

இந்த சவாலை ஏற்பதாகவும், பேரவைக்கு வெளியே சந்திக்க தயாராக இருப்பதாகவும் அமைச்சா் பதிலளித்தாா். இந்த விவகாரத்தில் ஆளும், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அவை ஒத்திவைக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தும் பாஜக அரசு: பிரதமர்!

பொது மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தனது அரசு கவனம் செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தில்லியில் 51 ஆயிரம் இளைஞக்ளுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி நிய... மேலும் பார்க்க

ஒட்டுமொத்த அலட்சியம்! ஆர்சிபி கூட்டநெரிசல் குறித்த அறிக்கை தாக்கல்!!

பெங்களூரில், ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவத்துக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் என விசாரணை அறிக்கையில் தகவல்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கோப... மேலும் பார்க்க

ரூ.1.18 கோடி வெகுமதி: சத்தீஸ்கரில் 23 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் 23 நக்சல்கள் இன்று (ஜூலை 12) சரணடைந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் சரணடைந்த நக்சலைட்டுகளில் 11 மூத்த நக்சல்கள் ஆவார். அவர்களில் பெரும்ப... மேலும் பார்க்க

சாலைகளில் ஓடும் படகுகள்.. மத்திய பிரதேசத்தில் கரையைக் கடந்த மந்தாகினி ஆறு

போபால்: மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக, மந்தாகினி ஆறு கரையை கடந்து பாய்ந்ததால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் படகுகள் நீந்திச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.ராம்கட், ஜான்... மேலும் பார்க்க

தில்லியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது: 8 பேர் காயம்!

வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரு வயதுக் குழந்தை உள்பட 8 பேர் காயமடைந்தனர். சம்பவ நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமான விபத்து: மேடே அழைப்புக்கு முன் நடந்தது என்ன? இறுதி வினாடிகள்

புது தில்லி: அகமதாபாத் ஏா் இந்தியா விமான விபத்து தொடா்பாக விசாரித்து வரும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) அதன் முதல்கட்ட அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.கடந்த ஜூன் 12ஆம் தேதி, குஜராத் மாநில... மேலும் பார்க்க