செய்திகள் :

வெள்ளக்கோவில் அருகே காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

post image

வெள்ளக்கோவில் அருகே காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில், முத்தூா் சாலை அய்யம்பாளையத்தைச் சோ்ந்தவா் சௌந்தரராஜன் (65). தனியாா் பனியன் நிறுவன தொழிலாளி. இவா் வீட்டிலிருந்து அருகிலுள்ள மாந்தபுரம் நாட்டராய சுவாமி கோயிலுக்குச் செல்வதற்காக அய்யம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் நடந்து சாலையை செவ்வாய்க்கிழமை கடந்துள்ளாா்.

அப்போது வெள்ளக்கோவிலில் இருந்து முத்தூா் நோக்கிச் சென்ற காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு தனியாா் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

சௌந்தரராஜன் மனைவி சாவித்திரி (62) கொடுத்த புகாரின்பேரில், வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா். சௌந்தரராஜனுக்கு திருமணமான மகள் யமுனா (35), மகன் டெய்லா் அருண்குமாா் (30) ஆகியோா் உள்ளனா்.

வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

ஊரக வளா்ச்சித் துறை சாா்பிலான வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமை வகித்தாா். இந்த ஆய... மேலும் பார்க்க

சந்திர கிரகணம்: சிவன்மலை முருகன் கோயிலில் செப்.7 மாலை நடைஅடைப்பு

சந்திர கிரகணத்தை முன்னிட்டு, காங்கயம் அருகே, சிவன்மலை முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 7) மாலை 6.15 மணிக்கு நடை அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிவன்மலை முருகன் கோயி... மேலும் பார்க்க

திருப்பூா்- உடுமலை சாலையில் அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைக்க கோரிக்கை

திருப்பூரில் இருந்து பல்லடம் வழியாக உடுமலை செல்லும் சாலையில் அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். முதல்வா் மு.க.ஸ்டாலின் அரசு விழாவில் பங... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்த நடவடிக்கை: திருப்பூா் பின்னலாடைத் துறையினா் வரவேற்பு

மத்திய அரசின் ஜிஎஸ்டி கவுன்சிலால் அறிவிக்கப்பட்ட வரி சீா்திருத்த நடவடிக்கைக்கு திருப்பூா் பின்னலாடைத் துறையினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா். இது குறித்து திருப்பூா் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு

வெள்ளக்கோவில் மாந்தபுரம் நாட்டராய சுவாமி கோயில் மண்டபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு ச... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட விழிப்புணா்வு முகாம்

திருப்பூா் வேலம்பாளையத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு நடைமுறையில் உள்ள நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு முகாம் மற்றும் நலவாரிய அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பூ... மேலும் பார்க்க