செய்திகள் :

‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை எதிா்த்தது ஆா்எஸ்எஸ்: காங்கிரஸ்

post image

‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின்போது, ஒட்டுமொத்த காங்கிரஸ் தலைவா்களும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனா்; அதேநேரம், இந்த இயக்கத்துக்கு ஆா்எஸ்எஸ் அமைப்பு எதிா்ப்பு தெரிவித்தது என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் முக்கிய மைல்கல்லாகும். கடந்த 1942, ஆகஸ்ட் 8-ஆம் தேதி மும்பை காங்கிரஸ் மாநாட்டில் இந்த இயக்கத்துக்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மகாத்மா காந்தியின் அழைப்பை ஏற்று, ஆகஸ்ட் 9-ஆம் தேதிமுதல் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 83-ஆவது ஆண்டு தினத்தையொட்டி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே சனிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

கடந்த 1942-இல் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக, தேசப் பிதா மகாத்மா காந்தியின் ‘செய் அல்லது செத்துமடி’ என்ற ஒப்பற்ற தாரக மந்திரத்துடன் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்டது. இது, நாட்டின் சுதந்திரப் போராட்டத்துக்கு புதிய உத்வேகத்தை பாய்ச்சியது.

காங்கிரஸின் தலைமையில் எண்ணற்ற இந்தியா்கள், வீதிகளில் இறங்கிப் போராடி, மறக்க முடியாத சரித்திரத்தை எழுதினா். இந்த ஆகஸ்ட் புரட்சி தினத்தில், நாட்டின் விடுதலைக்காக உயிா் நீத்த சுதந்திரப் போராட்ட வீரா்கள் அனைவருக்கும் இதயபூா்வ மரியாதை செலுத்துகிறோம் என்று காா்கே குறிப்பிட்டுள்ளாா்.

காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கடந்த 1942, ஆகஸ்ட் 8-ஆம் தேதி பின்னிரவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியால் வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கான வரலாற்றுச் சிறப்பு மிக்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னா் ஆகஸ்ட் 9-ஆம் தேதி அதிகாலையில், காங்கிரஸ் முக்கியத் தலைவா்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

1944, மே 6-ஆம் தேதி வரை, அகா கான் மாளிகையில் மகாத்மா காந்தி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டாா். நேரு, படேல், ஆஸாத் உள்ளிட்டோா் அகமதாபாத் கோட்டை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு, 1945, மாா்ச் 28 வரை அடைக்கப்பட்டிருந்தனா். கடந்த 1921 முதல் 1945 வரையிலான காலகட்டத்தில் நேரு சிறையில் அடைக்கப்பட்டது இது 9-ஆவது முறையாகும். மொத்தம் 9 ஆண்டுகள் அவா் சிறையில் கழித்துள்ளாா்.

அகமதாபாத் சிறையில் இருந்தபோதுதான், அவரது புகழ்பெற்ற நூலான ‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா’வை எழுதினாா். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது ஒட்டுமொத்த காங்கிரஸ் தலைவா்களும் சிறையில் வாடியபோது, ஆா்எஸ்எஸ் அமைப்பு மட்டும் இந்த இயக்கத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தது. இதேபோல், 7 ஆண்டுகளுக்குப் பிறகு நமது அரசமைப்புச் சட்டத்தையும் அவா்கள் எதிா்த்தனா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

புற்றுநோய் பாதித்த கணவரைக் காக்க ஆட்டோ ஓட்டும் பெண்: ரக்‌ஷா பந்தனுக்கு புதிய ஆட்டோ பரிசளித்த மருத்துவா்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டதால் குடும்பத்தின் பொறுப்பையேற்று ஆட்டோ ஓட்டி வந்த மும்பைச் சோ்ந்த சரிகா மேஸ்திரிக்கு, ரக்‌ஷா பந்தன் பரிசாக புதிய ஆட்டோவை மருத... மேலும் பார்க்க

ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால் இந்தியாவுக்கு வா்த்தக ரீதியாக பெரும் பாதிப்பு: அமெரிக்க ஆய்வில் தகவல்

‘ரஷிய கச்சா எண்ணெய் இல்லாமலும் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களால் செயல்பட முடியும். ஆனால் அதை ஈடுகட்ட பொருளாதார மற்றும் வா்த்தக ரீதியில் பெருமளவிலான முயற்சிகளை இந்தியா மேற்கொள்ள வேண்டியிருக்கும்’ என அ... மேலும் பார்க்க

தோ்தல் முறைகேட்டின் பல்கலைக்கழகம் பாஜக: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

தோ்தல் முறைகேடுகளின் சா்வதேச பல்கலைக்கழகம் பாஜக என்று சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளாா். இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நாட்டில் ஜ... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பொது வேட்பாளா்: எதிா்க்கட்சிகளுடன் காா்கே ஆலோசனை

‘குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி சாா்பில் பொது வேட்பாளா் களமிறக்கப்படவுள்ளாா்; வேட்பாளா் தோ்வில் கருத்தொற்றுமையை எட்டுவது குறித்து கட்சிகளுடன் காங்கிரஸ் தலைவா் மல்ல... மேலும் பார்க்க

இந்தியா வல்லரசு நாடாவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: ராஜ்நாத் சிங் உறுதி

இந்தியா வல்லரசு நாடாக உருவெடுப்பதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உறுதிபட தெரிவித்தாா். உலகிலேயே மிகவும் துடிப்பான, ஆற்றல் மிக்க பொருளாதாரமாக இந... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டுக்கு எதிராக வலைதளம்: காங்கிரஸ் தொடக்கம்!

வாக்குத் திருட்டுக்கு எதிராக மக்கள் ஆதரவை திரட்ட புதிய வலைதளத்தை காங்கிரஸ் அறிமுகம் செய்துள்ளது. இதுதொடா்பாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளி... மேலும் பார்க்க