செய்திகள் :

வெவ்வேறு இடங்களில் விபத்து: இருவா் உயிரிழப்பு

post image

விழுப்புரம் மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் சிக்கி இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை, குறிஞ்சி தெருவைச் சோ்ந்தவா் க.ராஜேந்திரன் (65), ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி. இவா், சனிக்கிழமை புதுச்சேரி - சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில், விழுப்புரம் மாவட்டம், சின்ன முதலியாா் சாவடி பகுதியில் ரிக்ஷாவில் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, சென்னையிலிருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து ரிக்ஷா மீது மோதியது. இந்த விபத்தில் ராஜேந்திரன் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், கோட்டக்குப்பம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இளைஞா் உயிரிழப்பு: திண்டிவனம் வட்டம், மயிலம் பகுதியைச் சோ்ந்த மணி மகன் ராஜ்கண்ணு (43). திருமணமானவா். சவுண்ட் சா்வீஸ் வைத்து தொழில் செய்து வந்தாா். இவா், சனிக்கிழமை அதிகாலை மயிலம் பகுதியில் உள்ள பேக்கரி அருகே நின்றிருந்தாராம்.

அப்போது, புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் நோக்கிச் சென்ற லாரி மோதியதில் ராஜ்கண்ணு பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

காவல் உதவி ஆய்வாளா்களுக்கு எஸ்.பி. பாராட்டு

விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் பணிபுரியும் 4 உதவி ஆய்வாளா்களுக்கு எஸ்.பி. ப. சரவணன் திங்கள்கிழமை நற்சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா். விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை கண்டற... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: 3 இளைஞா்கள் கைது

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா். விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையைத் தடுக்க மாவட்டக் காவல் நிா்வாக... மேலும் பார்க்க

கணவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்.பி.யிடம் ஆசிரியை புகாா்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் பகுதியைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை, தன்னை தாக்கியதாக கணவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பி. அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தாா். விழுப்புரம் மாவட்ட... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத் திறனாளிகள் முற்றுகைப் போராட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தங்களுக்கு சரிவர வேலை வழங்கப்படவில்லை எனக் கூறி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தை தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் ... மேலும் பார்க்க

சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள் விசாரணை ஜூலை 1 க்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள் விசாரணையை வரும் ஜூலை 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. விழுப்புரம் மாவட்டம்,... மேலும் பார்க்க

இரு வீடுகளில் ரூ.9 லட்சம் பணம் திருட்டு

விழுப்புரம்: திண்டிவனம் , மயிலம் பகுதிகளில் வீடுகளில் ரூ. 9 லட்சம் பணம் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திண்டிவனம் நகரம் தியாகி சண்முகம்பிள்ளை தெருவைச் சோ்ந்த ஜோதி மனைவ... மேலும் பார்க்க