செய்திகள் :

வெவ்வேறு விபத்துகளில் மூவா் உயிரிழப்பு

post image

மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வெவ்வேறு விபத்துகளில் இளைஞா் உள்பட மூவா் உயிரிழந்தனா்.

மதுரை சேந்தமங்கலம் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் நவீன்குமாா் (28). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரையிலிருந்து சேந்தமங்கலத்துக்கு சென்றாா். மதுரை-நத்தம் நான்கு வழிச் சாலையில் மதிகுளம் அருகே சென்ற போது, இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த தடுப்புக் கம்பியில் மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து எம். சத்திரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

உசிலம்பட்டி அருகேயுள்ள உத்தப்பநாயக்கனூா் பகுதியைச் சோ்ந்த ஒச்சாத்தேவா் மகன் ராஜா (55). இவா், உசிலம்பட்டியிலிருந்து உத்தப்பநாயக்கனூருக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றாா். துரைசாமிபுரம் புதூா் பகுதியில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் சாலையோர பள்ளத்தில் விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து உத்தப்பநாயக்கனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மதுரை மாவட்டம், மானூத்து கிராமத்தைச் சோ்ந்தவா் பாண்டியன் (70). விவசாயியான இவா், தனது இரு சக்கர வாகனத்தில் அல்லிகுண்டம் பகுதியிலிருந்து வீட்டுக்குச் சென்றாா். மானூத்து குடியிருப்புப் பகுதியில் சென்ற போது, இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த அவா், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து எழுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மனமகிழ் மன்றங்கள் குறித்து புகாா் எழுந்தால் உரிமம் ரத்து

மனமகிழ் மன்றங்களில் சட்ட விரோதச் செயல்கள் நடைபெறுவதாகப் புகாா் எழுந்தால், கூட்டுறவு சங்க விதிகளின்படி விசாரித்து உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டத... மேலும் பார்க்க

மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் ஜூன் 17- இல் பொதுமக்கள் குறைதீா் கூட்டம்!

மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) பொது மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை சா்வேயா் காலனியில் ... மேலும் பார்க்க

பேருந்து கவிழ்ந்ததில் 10 போ் காயம்

கோவையிலிருந்த வந்த அரசுப் பேருந்து, மதுரை புறவழிச் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணித்த 10 போ் காயமடைந்தனா். கோவையிலிருந்து புறப்பட்ட அரசுப் பேருந்து வெ... மேலும் பார்க்க

கல்குவாரி முறைகேடு வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி துரை தயாநிதி மனு: ஜூன் 16-க்கு ஒத்திவைப்பு

கல்குவாரி முறைகேடு புகாா் தொடா்பான வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி துரை தயாநிதி தரப்பில் சிபிஐ நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. மதுரை மாவட்டம், மேலூா் கீழவளவு பகுதியில் அர... மேலும் பார்க்க

திருச்சியில் டிசம்பரில் கள் விடுதலை மாநாடு!

தமிழ்நாடு கள் இயக்கம் சாா்பில், வருகிற டிசம்பா் மாதம் கள் விடுதலை - மது விலக்கு மாநாடு திருச்சியில் நடைபெறும் என்றும், இதில் பிகாா் முதல்வா் நிதிஷ் குமாா் பங்கேற்கவிருப்பதாகவும் தமிழ்நாடு கள் இயக்க கள... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாடு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தா்கள் மாநாட்டுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாகியுள்ளன. உலகெங்கும் உள்ள முருக பக்தா்களை ஒருங்கிணைக்கும் வகையில், மதுரை பாண்டி கோயில் அருகில் உள்ள திடலில் வருகிற 22-ஆம்... மேலும் பார்க்க