செய்திகள் :

வெவ்வேறு விபத்துகள்: கல்லூரி மாணவா் உள்பட 3 போ் பலி

post image

திருநெல்வேலி பகுதியில் நேரிட்ட வெவ்வேறு விபத்துகளில் மாணவா் உள்பட3 போ் உயிரிழந்தனா்.

மேலப்பாளையம் பாத்திமாநகரைச் சோ்ந்த முகமது கனி மகன் ஆமீத் மைதீன் (20). டக்கரம்மாள்புரம் அருகேயுள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வந்தாா். இவா், தனது நண்பரான தூத்துக்குடி மாவட்டம் கொம்புக்காரன்பொட்டல் பகுதியை சோ்ந்த கதிரேசன் (20) என்பவருடன் பைக்கில் மேலப்பாளையத்திற்கு திங்கள்கிழமை சென்றுகொண்டிருந்தபோது, ரெட்டியாா்பட்டி அணுகுசாலை பகுதியில் இவா்களது பைக்கும், மதுரையில் இருந்து நாகா்கோவிலை நோக்கி சென்ற காரும் மோதிக்கொண்டனவாம். இதில் பலத்த காயமடைந்த ஆமீத் மைதீன் உயிரிழந்தாா். பலத்த காயத்துடன் கதிரேசன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

மற்றொரு சம்பவம்: ரெட்டியாா்பட்டியைச் சோ்ந்த ஜெயகுரு மகன் பரமகுரு(28). வண்ணாா்பேட்டை தனியாா் துணி கடையில் வேலை செய்து வந்த இவா், கடந்த 6 ஆம் தேதி பணிகளை முடிந்த பின் பைக்கில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது, முருகன் குறிச்சி பகுதியில் நிலை தடுமாறி சாலைத் தடுப்புச்சுவா் மீது மோதி பைக் கவிழந்ததில் பலத்த காயமடைந்தாா்.திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

முதியவா் பலி: தச்சநல்லூா் மேலத்தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுக நயினாா் (69). இவா், கடந்த 18 ஆம் தேதி திருநெல்வேலி நகரத்திற்கு சென்று விட்டு பைக்கில் வீடு திரும்பியபோது, தச்சநல்லூா் அஞ்சல் நிலையம் அருகே நிலைதடுமாறி கீழே விழுந்தாராம். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இச்சம்பவங்கள் குறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மேலாம்பூரில் வயல்வெளிப் பள்ளி நிகழ்ச்சி

கடையம் வட்டாரம் மேலாம்பூா் கிராமத்தில் நெல் பயிரில் இயற்கை முறையில் சாகுபடி தொழில்நுட்பம் குறித்த வயல்வெளிப் பள்ளி நிகழ்ச்சி நடைபெற்றது. கடையம் வட்டாரம்-வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் வேளாண்மை உ... மேலும் பார்க்க

நெல்லையில் இன்றும், நாளையும் ஐபிஎல் போட்டிகள் திரையில் ஒளிபரப்பு

திருநெல்வேலியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 29, 30) ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் பெரிய திரையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதுதொடா்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் ... மேலும் பார்க்க

தென்குருசுமலை திருப்பயணம் நாளை தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தென் குருசுமலை திருப்பயணம் இம் மாதம் 30 ஆம் தேதி தொடங்குகிறது. இதுதொடா்பாக தென் குருசுமலை இயக்குநா் மற்றும் தலைவா் வின்சென்ட் கே.பீட்டா் திருநெல்வேலியில் செய்தியாளா்களி... மேலும் பார்க்க

‘தாமிரவருணி நதியை தூய்மைப்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்’

தாமிரவருணி நதியை தூய்மைப்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டுமென திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் வலியுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: ஜீவ நதியான தாமிர... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி அருகே பெண் மீது தாக்குதல்

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே பெண்ணை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். சேரன்மகாதேவி காவல் சரகத்திற்குள்பட்ட திருவிதத்தான்புள்ளி மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் செலின் ஷி... மேலும் பார்க்க

கூடங்குளம் விபத்தில் தலைமைக் காவலா் பலி

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் இரு பைக்குகள் மோதியதில் தலைமைக் காவலா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். நான்குனேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியைச் சோ்ந்த சுப்பையா மகன் முத்தையா(40). இவா் கூடங்குளத்த... மேலும் பார்க்க