செய்திகள் :

வேகத்தடையில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்; கதவு திறந்து நோயாளியுடன் நடுரோட்டில் விழுந்த ஸ்ட்ரெச்சர்

post image

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள ஓட்டுப்பட்டறை பகுதியில் இருந்து நோயாளி ஒருவரை நேற்று தனியார் ஆம்புலன்ஸ் மூலம் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

குன்னூர் நகரின் நுழைவு வாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள லெவல் கிராஸிங் வேகத்தடை மீது ஆம்புலன்ஸ் ஏறி இறங்கும் போது ஆம்புலன்ஸினுள் பொருத்தப்பட்டிருந்த ஸ்ட்ரெச்சர் திடீரென கழன்று நழுவி பின்பக்க கதவில் பலமாக மோதியிருக்கிறது.‌‌

தனியார் ஆம்புலன்ஸ்

கதவு திறக்கப்பட்டதால் உள்ளே இருந்த நோயாளி ஸ்ட்ரெச்சருடன் நடுரோட்டில் கீழே விழுந்துள்ளார். இதைக் கண்டுப் பதறிய பொதுமக்கள், பின்னால் வந்த வாகனங்கள் அனைத்தையும் உடனடியாக நிறுத்திவிட்டு நோயாளியை பத்திரமாக மீட்டு மீண்டும் ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

அவசர காலங்களில் உயிர் காக்கும் வாகனமாக செயல்படும் ஆம்புலன்ஸ்களை முறையாக பராமரிக்காத தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனத்தை மக்கள் கண்டித்து வருகின்றனர்.

ஓடும் ஆம்புலன்ஸில் இருந்து நோயாளி ஒருலர் நடுரோட்டில் கீழே விழும் சி.சி.டி.வி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.‌‌

தனியார் ஆம்புலன்ஸ்

அவசர தேவைகளுக்காக ஆம்புலன்ஸ்களை தொடர்ந்து அதிக வேகத்தில் இயக்க வேண்டி இருப்பதால் குறிப்பிட்ட கால இடைவெளியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மூலம் முறையாக ஆய்வு செய்து சான்றிதழ் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் மூவர் பலி; மன்னிப்பு கேட்ட ஒடிஷா முதல்வர்

இன்று (29.06.2025) ஒடிஷாவில் நடைபெற்ற பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் ஏற்பட்ட நெருக்கடியால் 3 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். பசந்தி சாஹு, பிரேமகாந்த் மொகந்தி மற்றும் பிரவதி தாஸ் ... மேலும் பார்க்க

உத்தரகாண்ட்: மலையிலிருந்து தவறி ஆற்றில் விழுந்த பஸ்; 10 பேர் மாயம், 3 பேர் உயிரிழப்பு!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மலையில் ஏராளமான கோயில்கள் இருக்கிறது. இக்கோயில்களுக்கு தினமும் வாகனங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்ற வண்ணம் இருக்கின்றனர். மலைப்பாதை மிகவும் குறுகலாகவும், வளைவுகள் நிற... மேலும் பார்க்க

நெல்லை: மீட்புப் பணியில் காவலர் மரணம்; அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு; நிவாரணம் அறிவித்த முதல்வர்

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வி.கோவில்பத்து செங்கல்சூலையில் பணிபுரியும் செய்யதுங்கநல்லூர் மேலநாட்டார்குளத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கடந்த 18ஆம் தேதி இரவு வேலை முடித்துவிட்டு வீட்டிற்குத் தனது இருசக்கர வா... மேலும் பார்க்க

மும்பை புறநகர் ரயிலில் தொங்கியபடி பயணம்; அதிர்ச்சி தரும் பலி எண்ணிக்கை; தானியங்கி கதவு எப்போது?

மும்பையில் புறநகர் ரயில் மக்களின் உயிர்நாடியாக இருக்கிறது. புறநகர் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுவிட்டால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிவிடும். எனவே ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு, மும்பை ரயில்வே-க்... மேலும் பார்க்க

தென்காசி: கழன்று ஓடிய அரசுப் பேருந்து சக்கரங்கள்; மருத்துவமனையில் 3 மாணவர்கள்; அரசு சொல்வது என்ன?

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைகால் என்ற இடத்தில், 87 பயணிகளுடன் சென்ற அரசு பேருந்தின், பின்புற ஆக்சில் உடைந்ததில், சக்கரங்கள் தனியாகக் கழன்று ஓடி விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் காயங்களுடன்... மேலும் பார்க்க

``ஜூலை பாதி வரை நிறுத்தி வைக்கிறோம்..'' - விமான விபத்தையடுத்து ஏர் இந்தியா அதிரடி முடிவு!

குஜராத் அகமதாபாத்தில் இருந்து கிளம்பிய ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 171 விமானம் கடந்த 12-ம் தேதி லண்டனுக்கு கிளம்பியது. கிளம்பிய கிட்டத்தட்ட 5 நிமிடங்களிலேயே, அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவக் கல்ல... மேலும் பார்க்க