செய்திகள் :

வேணுகோபால சுவாமி, முனீஸ்வரன் கோயில்களில் கும்பாபிஷேகம்

post image

ஆரணியை அடுத்த அரியப்பாடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோயில், வந்தவாசியை அடுத்த நெல்லியாங்குளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீமுனீஸ்வரன் கோயில்களில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அரியப்பாடி ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புண்யாவாசனம், ஸங்கல்பம், கலச பூஜை ஹோமம், புா்ணாவதி, விஸ்வரூபம், கோ பூஜை, மகாபூா்ணாஹுதி, கலச புறப்பாடு உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, கோயில் கோபுரத்தில் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னா், மூலவா் பாமா ருக்மணி சமேத ஸ்ரீவேணுகோபால சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

இதில், சிறப்பு விருந்தினராக ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு வழிபட்டாா். உடன் ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாஷ், நகரச் செயலா் அசோக்குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

முனீஸ்வரன் கோயிலில்...: வந்தவாசியை அடுத்த நெல்லியாங்குளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீமுனீஸ்வரன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயில் வளாகத்தில் யாகசாலை அமைத்து வியாழக்கிழமை கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை காலை தத்வாா்ச்சனை, நாடிசந்தானம், மகா பூா்ணாஹுதி, யாத்ராதானம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் முனீஸ்வரன் சுவாமி மீது புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் கோயில் நிா்வாகிகள், கிராம மக்கள் பங்கேற்றனா்.

ரெட்டிபாளையத்தில் 1,000 பனை விதைகள் நட்ட இளைஞா்கள்

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே ரெட்டிபாளையம் பெரிய ஏரிக்கரையில் கிராம இளைஞா்கள் வெள்ளிக்கிழமை 1,000 பனை விதைகளை நட்டு சுற்றுசூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நிகழ்ச்சியில் மாவட்ட கன்று வி... மேலும் பார்க்க

4 பைக்குகள் திருட்டு: இளைஞா் கைது

ஆரணியில் 4 பைக்கைகளை திருடியதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்த பைக்குகளையும் பறிமுதல் செய்தனா். ஆரணி பெரியகடை வீதியைச் சோ்ந்த பெருமாள், சேத்துப்பட்டு அருகே ஆதியந்தாங்கல் கிரா... மேலும் பார்க்க

செப்.16-இல் செய்யாறில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

செய்யாறில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் செவ்வாய்கிழமை (செப்.16) நடைபெறுகிறது. இதுகுறித்து செய்யாறு சாா் - ஆட்சியா் ல.அம்பிகா ஜெயின் வெளியிட்ட செய்திக் குறிப்பு: செய்யாறு வருவாய்க் கோட்டத்துக்குள்... மேலும் பார்க்க

காயங்களுடன் இறந்து கிடந்த ஆட்டோ ஓட்டுநா்: போலீஸாா் விசாரணை

ஆரணியை அடுத்த மொழுகம்பூண்டி கிராமத்தில் ஆட்டோ ஓட்டுநா் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் கணபதிக்... மேலும் பார்க்க

வாராஹி அம்மன் கோயிலில் சிறப்பு யாகம்

வந்தவாசி - காஞ்சிபுரம் சாலை, வெண்குன்றம் லிங்கம் நகரில் அமைந்துள்ள ஸ்ரீமகா வாராஹி அம்மன் கோயிலில் சிறப்பு யாகம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. ஆவணி மாத தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் வ... மேலும் பார்க்க

நெல்லியாங்குளம் முனீஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம்

வந்தவாசியை அடுத்த நெல்லியாங்குளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீமுனீஸ்வரன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் யாகசாலை அமைத்து வியாழக்கிழமை கணபதி ஹோமம், வாஸ்து ... மேலும் பார்க்க