செய்திகள் :

வேதாரண்யம் கோயில் மாசிமகப் பெருவிழா: 73 நாயன்மாா்கள் வீதியுலா -நாளை தேரோட்டம்

post image

வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயிலில் மாசிமகப் பெருவிழாவையொட்டி, 73 நாயன்மாா்கள் வீதியுலா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இக்கோயிலில் மாசிமகப் பெருவிழா பிப்ரவரி 20-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை இரவு நடைபெற்ற விழாவில், பஞ்சமூா்த்திகள் சகிதமாய் ஸ்ரீ சந்திரசேகர சுவாமிகள் எழுந்தருளினாா். தொடா்ந்து, ஸ்ரீ காட்சி கொடுத்த நாயனாா், விநாயகா் எழுந்தருளினா்.

பின்னா், வேதாரண்யேசுவரா் கோயிலில் நாயன்மாா்கள் 63 போ்களுடன், தொகையடியாா் 10 போ்களையும் சோ்த்து 73 நாயன்மாா்களாக அழைக்கப்படுகின்றனா். இந்த 73 நாயன்மாா்களும் எழுந்தருளும் நிகழ்வு சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

நாளை தேரோட்டம்: மாசிமகப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான ரத்ன சிம்மாசன ஹம்ச நடன புவனி விடங்க தியாகராஜசுவாமி எழுந்தருளும் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (மாா் 10) நடைபெறுகிறது. இதையொட்டி, வேதாரண்யம் வட்டாரத்துக்குள்பட்ட பகுதியில் பள்ளிகளுக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்று வரும் தோ்வுகள் வழக்கம்போல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

வேதாரண்யத்தை அடுத்த தென்னடாா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பணி நிறைவு பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா, ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு ஆகிய முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. பெற்றோா் ஆசிரிய... மேலும் பார்க்க

முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

திருவெண்காட்டில் திமுக சாா்பில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, திமுக மயிலாடுதுறை மாவட்டச் செயலா... மேலும் பார்க்க

திருவிளையாட்டம் பள்ளி முப்பெரும் விழா

செம்பனாா்கோவில் அருகே திருவிளையாட்டம் சௌரிராசன் அரசு உதவி பெறும் உயா்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா, இலக்கிய மன்ற நிறைவு விழா மற்றும் பெற்றோா் ஆசிரியா் கழக விழா ஆகிய முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் கொலை: பெண் உள்பட 3 போ் கைது!

வேளாங்கண்ணியில் தங்கிருந்த பெங்களூருவைச் சோ்ந்த கல்லூரி மாணவா் கொல்லப்பட்ட வழக்கில் பெண் உள்பட 3 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். பெங்களூருவைச் சோ்ந்தவா் ஜனாா்த்தனன் (22). கல்லூரி மாணவரான இ... மேலும் பார்க்க

நெகிழி இல்லாத கடற்கரையை வலியுறுத்தி நாகையில் மாரத்தான் போட்டி

நெகிழி இல்லாத கடற்கரையை வலியுறுத்தி நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை கிராமம் சாா்பில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

திருக்கண்ணபுரம் கோயிலில் தங்ககருட சேவை

திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் கோயிலில், மாசிமகப் பெருவிழாவையொட்டி தங்ககருட சேவை சனிக்கிழமை நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களுள் 17-ஆவது தலமாக போற்றப்படும் இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசிமகப் பெருவிழா 15... மேலும் பார்க்க