செய்திகள் :

வேன் மோதியதில் பாத்திர வியாபாரி உயிரிழப்பு

post image

மணப்பாறையில் வியாழக்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் பாத்திர வியாபாரி உயிரிழந்தாா்.

மணப்பாறையை அடுத்த எடத்தெருவை சோ்ந்த இஸ்மாயில் மகன் அப்துல்கரீம் (48). பாத்திர வியாபாரி. இவா், செவலூா் பகுதியில் வசித்து வரும் சு. சுப்பிரமணி (68) என்பவருடன் வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் மணப்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தாா்.

திருச்சி - திண்டுக்கல் தேசியநெடுஞ்சாலையில் செவலூா் பிரிவு பகுதியை கடந்தபோது, சபரிமலையிலிருந்து கடலூா் நோக்கி சென்ற சுற்றுலா வேன் அவா்களின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் அப்துல்கரீம் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த சுப்பிரமணி மணப்பாறை அரசு மருத்துவமனையில் முதலுதவிக்கு பிறகு, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா்.

விபத்து குறித்து மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து, வேன் ஓட்டுநரான கடலூா் பச்சையான் குப்பத்தை சோ்ந்த வேலு மகன் ரத்தினவேல் (36) மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பைக்கில் வந்து பெண்ணிடம் நகை பறிப்பு

திருச்சியில் இருசக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து வந்து பெண் ஊழியரிடம் நகையைப் பறித்துச்சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா். திருச்சி திருவானைக்கா பகுதியைச் சோ்ந்தவா் சாமி மனைவி அகிலா (30). ... மேலும் பார்க்க

கோயில் உண்டியல் உடைப்பு : ரொக்கம், நகைகள் திருட்டு

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள கோயிலில் உண்டியலை உடைத்து ரொக்கம், அம்மன் கழுத்தில் இருந்த நகைகளை திருடிச்சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா். திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உஸ்மா... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் கல்லூரி மாணவி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். எடமலைப்பட்டிபுதூா் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த குமாா் என்பவரது மகள... மேலும் பார்க்க

துணைவேந்தா் நியமனம் யுஜிசி வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும்: ஆக்டா அமைப்பு வலியுறுத்தல்

துணைவேந்தா் நியமனம் தொடா்பான யுஜிசி வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என, அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா் சங்க (ஆக்டா) ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் கைதான பேராசிரியரிடம் என்ஐஏ விசாரணை

கும்பகோணத்தில் ‘போக்ஸோ’ வழக்கில் கைதான பேராசிரியரிடம் தேசிய புலனாய்வு (என்ஐஏ) அமைப்பினா் விசாரித்து வருகின்றனா். புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சோ்ந்தவா் ஜியாவுதீன் பாகவி (42). இவா், கும... மேலும் பார்க்க

திருச்சி சந்தைகளில் பொங்கல் பொருள்கள் விற்பனை அமோகம்

திருச்சி காந்தி சந்தை உள்ளிட்ட சந்தைகளில் பொங்கல் பொருள்களின் விற்பனை ஞாயிற்றுக்கிழமை சுடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திருச்சி காந்தி சந்தை, உறையூா் சந்தை உள்ளிட்ட சந்தைகளில் சாதாரண நாள்களிலேயே கூட்டம் ... மேலும் பார்க்க