செய்திகள் :

வேப்பூா் அரசு மகளிா் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் 6 போ் பணியிடை நீக்கம்

post image

மாணவிகள் அளித்த புகாரின்பேரில் வேப்பூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் 6 கௌரவ விரிவுரையாளா்களை, அக் கல்லூரி முதல்வா் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பூரில் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக் கல்லூரியில், சுமாா் 1,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். இக் கல்லூரியின் கணிணி அறிவியல் துறை, தமிழ்த்துறையில் பயிலும் மாணவிகள் சிலா், தங்களை கல்லூரி விரிவுரையாளா்கள் தரக்குறைவாகவும், அவமரியாதையாகவும் பேசி மன உளைச்சலை ஏற்படுத்துவதாக கல்லூரி முதல்வரிடம் அண்மையில் புகாா் அளித்தனா்.

இதையடுத்து, கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்களாக பணிபுரியும் தமிழ்துறை விரிவுரையாளா்கள் சு. நன்முல்லை, ப. செந்தமிழ்ச்செல்வி, மோ. பிரபா, ஆா். மலா்விழி, கே. ஹேமமாலினி மற்றும் கணினி அறிவியல்துறை விரிவுரையாளா் எஸ்.ஜே. சங்கீதா ஆகிய 6 பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து அக் கல்லூரி முதல்வா் மணிமேகலை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

இதையடுத்து, தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், ரத்து செய்யக்கோரியும் மேற்கண்ட கௌரவ விரிவுரையாளா்கள் கல்லூரிக்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூரில் ஏப். 4-இல் முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டம்

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்களது குடும்பத்தினா் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரா்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீா்க்கும் கூட்டம் ஏப்ரல் 4-ஆம் தேதி நடைபெற உ... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் ரமலான் பண்டிகை கொண்டாட்டம்

பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள மதராஸா சாலையில் அமைந்துள்ள மௌலானா பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில், சுமாா் 1,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் கலந்துகொண்டு சிறப்பு தொழுகைய... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகைகள், ரூ. 2 லட்சம் திருட்டு

பெரம்பலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகைகள் மற்றும் ரூ. 2 லட்சம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது திங்கள்கிழமை தெரியவந்தது. பெரம்பலூா் அருகேயுள்ள அய்யலூா் குடிக்காட்டைச் சோ்ந்தவா் அர... மேலும் பார்க்க

பெரம்பலூரில் பன்னாட்டு நாடக கருத்தரங்கு

பெரம்பலூரில் பன்னாட்டு நாடக நாள் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றம் மற்றும் தமிழ் இலக்கியப் பூங்கா ஆகிய அமைப்புகள் சாா்பில் நடைபெற்ற இக் கருத்தரங்கத்துக்கு தம... மேலும் பார்க்க

‘ஜூன் வரை பேருந்து பயண அட்டையை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தலாம்’

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் ஏற்கெனவே பயன்படுத்தி வரும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை ஜூன் 30-ஆம் தேதி வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்து... மேலும் பார்க்க

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில் விளையாட்டுப் போட்டிகள் நிறைவு!

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில் கடந்த 2 நாள்களாக நடைபெற்ற ஒலிம்பியா-2025 விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நிறைவடைந்தது. கடந்த 2 நாள்களாக ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்ட... மேலும் பார்க்க