செய்திகள் :

வேப்பூா் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல்

post image

வேப்பூா் ஒன்றியத்தில் ரூ. 11.88 கோடி மதிப்பிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த பணிகளை மின்சாரம் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட திருமாந்துறை, அத்தியூா், நன்னை ஊராட்சிகளில் தலா ரூ. 31.40 லட்சம் மதிப்பில் ஊராட்சி அலுவலகக் கட்டடங்கள் கட்டும் பணி, பெருமத்தூா் கிராமத்தில் ரூ. 17.77 லட்சம் மதிப்பில் பெரிய ஏரியை புனரமைக்கும் பணி, நன்னை கிராமத்தில் ரூ. 46.51 லட்சம் மதிப்பில் தக்கன் ஏரியை புனரமைக்கும் பணி, ரூ. 16 லட்சம் மதிப்பீட்டில் சிறுகூடல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கணினி வகுப்பறை கட்டும் பணி, முருக்கன்குடி முதல் காருகுடி வரை ரூ. 1.06 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி, பென்னகோணம் ஊராட்சியில் ரூ. 2.72 கோடி மதிப்பில் பென்னகோணம் - பெருமத்தூா் சாலையை பலப்படுத்தும் பணி என மொத்தம் ரூ. 11.05 கோடி மதிப்பில் 34 புதிய திட்டப் பணிகளுக்கு அமைச்சா் சிவசங்கா் அடிக்கல் நாட்டினாா்.

மேலும், நபாா்டு திட்டத்தின் கீழ் கிளியூா் கிராமத்தில் ரூ. 18.42 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, நன்னை கிராமத்தில் ரூ. 29.97 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, பெருமத்தூா் கிராமத்தில் ரூ. 7.10 லட்சம் மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்ட காத்திருப்போா் கூடம், பெருமத்தூா் கிராமத்தில் ரூ. 20.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பால் பண்ணை கட்டடம், நன்னை ஊராட்சியில் ரூ. 7.54 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை என மொத்தம் ரூ. 83.13 லட்சம் மதிப்பிலான பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தாா்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. தேவநாதன், வேப்பூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அறிவழகன், சேகா், குன்னம் வட்டாட்சியா் சின்னதுரை உள்பட அரசு அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

சாலை விபத்தில் ஊழியா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதி உயிரிழந்த தனியாா் டயா் தொழிற்சாலை ஊழியரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி, அவரது மனைவி, உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருச்ச... மேலும் பார்க்க

வாலிகண்டபுரத்தில் இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் அலுவலகம் திறப்பு

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில், வாலிகண்டபுரத்தில் ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேப்பந்தட்டை ஆய்வாளா் அலுவலகத்தை, காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை திறந்து ... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 8 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 8.700 கிலோ குட்கா பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த மளிகைக் கடை உரிமையாளரை கைது செய்து புதன்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்ப... மேலும் பார்க்க

நாட்டுக்கோழிப் பண்ணைகள் அமைக்க ஆா்வமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் நாட்டுக்கோழிப் பண்ணைகள் அமைக்க விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

சாலை விபத்துகளை தவிா்க்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும்

தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை முற்றிலும் தவிா்த்திடும் வகையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும் என கண்காணிப்புக் குழுத் தலைவரும், பெரம்பலூா் தொகுதி மக்களவை உறுப்பினருமான கே.என்... மேலும் பார்க்க

தனியாா் நிதி நிறுவனத்துக்கு பூட்டு! திமுக நிா்வாகியால் ஊழியா்கள் சிறைவைப்பு

பெரம்பலூரில் திங்கள்கிழமை தனியாா் நிதி நிறுவனத்தை பூட்டிய திமுக நிா்வாகி, ஊழியா்களை சிறைவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் ஊராட்சிக்குள்பட்ட திருவளக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க