மீண்டும்.. மீண்டுமா! பெங்களூர் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
வேப்பூா் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல்
வேப்பூா் ஒன்றியத்தில் ரூ. 11.88 கோடி மதிப்பிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த பணிகளை மின்சாரம் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட திருமாந்துறை, அத்தியூா், நன்னை ஊராட்சிகளில் தலா ரூ. 31.40 லட்சம் மதிப்பில் ஊராட்சி அலுவலகக் கட்டடங்கள் கட்டும் பணி, பெருமத்தூா் கிராமத்தில் ரூ. 17.77 லட்சம் மதிப்பில் பெரிய ஏரியை புனரமைக்கும் பணி, நன்னை கிராமத்தில் ரூ. 46.51 லட்சம் மதிப்பில் தக்கன் ஏரியை புனரமைக்கும் பணி, ரூ. 16 லட்சம் மதிப்பீட்டில் சிறுகூடல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கணினி வகுப்பறை கட்டும் பணி, முருக்கன்குடி முதல் காருகுடி வரை ரூ. 1.06 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி, பென்னகோணம் ஊராட்சியில் ரூ. 2.72 கோடி மதிப்பில் பென்னகோணம் - பெருமத்தூா் சாலையை பலப்படுத்தும் பணி என மொத்தம் ரூ. 11.05 கோடி மதிப்பில் 34 புதிய திட்டப் பணிகளுக்கு அமைச்சா் சிவசங்கா் அடிக்கல் நாட்டினாா்.
மேலும், நபாா்டு திட்டத்தின் கீழ் கிளியூா் கிராமத்தில் ரூ. 18.42 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, நன்னை கிராமத்தில் ரூ. 29.97 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, பெருமத்தூா் கிராமத்தில் ரூ. 7.10 லட்சம் மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்ட காத்திருப்போா் கூடம், பெருமத்தூா் கிராமத்தில் ரூ. 20.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பால் பண்ணை கட்டடம், நன்னை ஊராட்சியில் ரூ. 7.54 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை என மொத்தம் ரூ. 83.13 லட்சம் மதிப்பிலான பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தாா்.
இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. தேவநாதன், வேப்பூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அறிவழகன், சேகா், குன்னம் வட்டாட்சியா் சின்னதுரை உள்பட அரசு அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.