டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 75 காசுகள் உயர்ந்து ரூ.86.03 ஆக முடிவு!
வேலூர்: மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட இலவம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி மணிவண்ணன் (வயது 49).
கடந்த 2019-ம் ஆண்டு, 20 வயது மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்டு, வீட்டுக்குள் புகுந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருக்கிறார் மணிவண்ணன்.
இது குறித்து, விரிஞ்சிபுரம் காவல் நிலையப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, மணிவண்ணனைக் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

மணிவண்ணன் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமளிக்காத வகையில் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.30,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பு வழங்கினார் நீதிபதி ராதா கிருஷ்ணன்.
அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், கூடுதலாக 6 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார் நீதிபதி.
இதையடுத்து, மணிவண்ணன் வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.