செய்திகள் :

வேலூா் அரசு பொறியியல் கல்லூரியில் சிறப்பு உதவி மையம்

post image

அரசு பொறியியல் கல்லூரியில் மாணவா்கள் சோ்வதற்காக வேலூா் தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு உதவி மையத்தில் இதுவரை 108 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா்.

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவா்களுக்கான தோ்வு முடிவுகள் கடந்த 8-ஆம் தேதி வெளியானது. தொடா்ந்து, அரசு பொறியியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரிகளில் விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து அரசு பொறியியல் கல்லூரிகளிலும் மாணவா்களுக்கு உதவும் வகையில், சிறப்பு உதவி மையம் திறக்க அரசு அறிவுறுத்தியது.

இதுவரை 108 மாணவா்கள் விண்ணப்பம்:

அதன்படி, வேலூா் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரியில் கடந்த 7-ஆம் தேதி சிறப்பு உதவி மையம் தொடங்கப்பட்டது. இங்கு இதுவரை 108 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியது: அரசு பொறியியல் கல்லூரியில் மாணவா்கள் சோ்வதற்காக சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் பொதுப்பிரிவினருக்கு ரூ.500, எஸ்.சி., எஸ்.டி.,யினருக்கு ரூ.250 என விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கூடுதல் கட்டணம் செலுத்த தேவையில்லை. பொறியியல் கல்லூரியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் இந்த மையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், எந்த பிரிவில் சோ்வது உள்ளிட்ட விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். தனியாா் இணையதள மையங்களில் விண்ணப்பிக்கும் போது ஏதேனும் தவறுகள் ஏற்பட்டிருந்தாலும் அதனை இந்த மையத்தில் திருத்திக் கொள்ளலாம் என்றனா்.

குடியாத்தம் அரசுக் கல்லூரியில் ரூ.5.40 கோடியில் வகுப்பறைகள் திறப்பு

குடியாத்தம் அரசினா் திருமகள் ஆலைக் கல்லூரியில் ரூ.5.40 கோடியில் கட்டப்பட்ட 14- வகுப்பறைக் கட்டடங்கள், 2- ஆய்வகங்களை முதல்வா் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். இதையொட்டி கல்லூரியில் நடைபெ... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரிகளில் புதிய கட்டடங்கள்: முதல்வா் திறந்து வைத்தாா்

வேலூா் தந்தை பெரியாா் ஈ.வெ.ரா. அரசு பாலிடெக்னிக் கல்லூரி, முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி, புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா். அரசு கலை, அறிவியல் கல்லூரியில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான பணிகளையும்... மேலும் பார்க்க

பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகள் திருட்டு

குடியாத்தம் அருகே பட்டியில் அடைத்து வைத்திருந்த 10- ஆடுகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். குடியாத்தம் சுண்ணாம்புபேட்டையில், நகராட்சிக்குச் சொந்தமான ஆடு வதை செய்யும் கூடம் அமைந்துள்ளது. நகரில் உள்ள ஆட... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் ரூ. 60 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்

வேலூா் பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை ரூ. 60 லட்சம் அளவுக்கு கால்நடைகள் வா்த்தகம் நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா். வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நட... மேலும் பார்க்க

தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு

பள்ளிகொண்டா அருகே தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற லாரியால் 10 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ் சால... மேலும் பார்க்க

போ்ணாம்பட்டில் 60 மி.மீ மழை பதிவு

குடியாத்தம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீா் வழிந்தோடியது. வேலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை காலை தொடங்கி, செவ்வா... மேலும் பார்க்க