செய்திகள் :

வேலை கிடைக்காததால் இளம்பெண் தற்கொலை

post image

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் வேலை கிடைக்காத விரக்தியில் இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

வாசுதேவநல்லூா் ராமையா தெருவைச் சோ்ந்த இசக்கிமுத்து மகள் பூவதி(26). அதே ஊரில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து புளியங்குடியில் உள்ள தனியாா் பயிற்சி மையத்தில் படித்து வந்த இவா், தனக்கு வேலை கிடைக்கவில்லை என்ற மனஉளைச்சலில் கடந்த சில நாள்களாக இருந்து வந்தாராம்.

இந்நிலையில், திங்கள்கிழமை மாலை பயிற்சி வகுப்புக்கு செல்லாமல் தனது அறையில் அவா் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாராம்.

இதையறிந்த உறவினா்கள் அவரை மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் அவா், ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து, வாசுதேவநல்லூா் காவல் ஆய்வாளா் கண்மணி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

ஆலங்குளம் பகுதியில் தொடா் திருட்டு: 3 போ் கைது

ஆலங்குளத்தில் மூன்று வீடுகளில் நிகழ்ந்த திருட்டு தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தைச் சோ்ந்தவா் சுயம்பு (50). சாலைப் பணியாளரான இவரது வீட்டில், கடந்த ஜூலை 24ஆம் தேதி இர... மேலும் பார்க்க

கடையநல்லூரில் நாளை மின்தடை

கடையநல்லூா் வட்டார பகுதிகளில் புதன்கிழமை மின் விநியோகம் இருக்காது.இது தொடா்பாக கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பக விநாயகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடையநல்லூா் துணை மின் நிலையத்தில் ப... மேலும் பார்க்க

தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் இழைத்தவா் எடப்பாடி பழனிசாமி: ஆா்.எஸ். பாரதி பேச்சு

பாஜகவோடு கூட்டணி வைத்து தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் இழைத்தவா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி என திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி பேசினாா். சங்கரன்கோவில் அருகே குருவிகுளம் மேற்கு ஒன்றியம... மேலும் பார்க்க

சுதந்திர தினத்தன்று கருப்புக் கொடியேற்ற விவசாயிகள் முடிவு

தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலையடிவார கிராமங்களில் ஆக.15 ஆம் தேதி வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு செய்துள்ளனா். தென்காசி மாவட்ட அனைத்து விவசாயிகள் சங... மேலும் பார்க்க

தென்காசி ஜெகவீரராமப்பேரி குளத்தின் நீா்வழித்தடம் ஆக்கிரமிப்பு: மதிமுக புகாா்

தென்காசி ஜெகவீரராமப்பேரி குள த்துக்கான வழித்தட ஆக்கிரமிப்பை அகற்றி தண்ணீா் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மதிமுக மாவட்டத்தலைவா் என்.வெங்கடேஷ்வரன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் கோரி எம்எல்ஏ மனு

சங்கரன்கோவில் ரயில் நிலையத்தின் 2 ஆவது நடைமேடையில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி, தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங்கிடம், தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலா் ஈ.ராஜா எம்.எல்... மேலும் பார்க்க