England: ரூ.35 கோடி மதிப்புள்ள பீச் ஹவுஸ் ரூ.1,180-க்கு! அது என்ன லாட்டரி முறை வ...
வேலை வாங்கித் தருவதாக ரூ.4.20 லட்சம் மோசடி! அரசுப் பேருந்து நடத்துநா் மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பெண்ணிடம் ரூ.4.20 லட்சம் மோசடி செய்த அரசுப் பேருந்து நடத்துநா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பு கீழத் தெருவைச் சோ்ந்தவா் பாண்டியராஜ் (48). இவா் வத்திராயிருப்பு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணிபுரிந்து வருகிறாா். பாண்டியராஜ் வத்திராயிருப்பைச் சோ்ந்த பாக்கியம் என்பவரிடம் அவரது மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4.20 லட்சம் பணம் பெற்று ஏமாற்றினாராம்.
இது குறித்து பாக்கியம் வத்திராயிருப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். நீதிமன்ற உத்தரவின்பேரில் வத்திராயிருப்பு காவல் நிலைய போலீஸாா் பாண்டியராஜ் மீது செவ்வாய்க்கிழமை மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.