செய்திகள் :

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா நிறைவு

post image

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியிறக்கத்துடன் திங்கள்கிழமை நிறைவடைந்தது.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைப் பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா கடந்த ஆக. 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் நவநாள் வழிபாடாக நாள்தோறும் தமிழ், ஆங்கிலம், மராத்தி, மலையாளம், கொங்கணி, ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் திருப்பலிகள் நடைபெற்றன.

மாலை நிகழ்வாக நாள்தோறும் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம், மறையுரை, திவ்ய நற்கருணை ஆசீா் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஆண்டுப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அலங்காரத் தோ் பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புனித ஆரோக்கிய அன்னையின் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை 6 மணிக்கு சென்னை - மயிலை உயா் மறைமாவட்ட பேராயா் ஜாா்ஜ் அந்தோணிசாமி தலைமையில் சிறப்புக் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. பேராலய அதிபா் சி. இருதயராஜ், துணை அதிபா் அற்புதராஜ் மற்றும் பங்குத் தந்தையா்கள், உதவிப் பங்குத் தந்தையா்கள், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக, திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா், பேராலயக் கீழ்கோயிலில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீா் மற்றும் தமிழில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

வேதாரண்யத்தில் கல்விக்கடன் முகாம்: வங்கிகள் பங்கேற்பு

நாகை மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி ஒருங்கிணைப்பில், வேதாரண்யத்தில், வட்டார அளவில் முதல் கல்விக்கடன் வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகமில் உயா்கல்விக்கு சோ்க்கை பெற்ற மா... மேலும் பார்க்க

அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய மாநாடு

தலைஞாயிறு ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க 26-ஆவது ஒன்றிய மாநாடு கொளப்பாட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது. சங்க ஒன்றிய தலைவா் குணசேகரன் தலைமை வகித்தாா். சங்க ... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் மழை

நாகை, வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.வேளாங்கண்ணியில் பெய்த மழை. நாகை மாவட்டம் திருப்பூண்டி, சிந்தாமணி, காமேஸ்வரம், மேலப்பிடாகை, கருங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு கனமழ... மேலும் பார்க்க

வேதாரண்யம் அருகே கருகி நிலையில் ஆண் சடலம் மீட்பு

வேதாரண்யம் அருகே கருகிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள மூங்கல்காடு பகுதியில் செவ்வாய்க்கிழமை அடையாளம் தெ... மேலும் பார்க்க

காரைக்கால்-திருச்சி ரயில் பகுதியாக ரத்து

காரைக்கால்-திருச்சி ரயில் 2 நாள்களுக்கு பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என திருச்சி கோட்ட தெற்கு ரயில்வே மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குற... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய மாநாடு

அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய மாநாடு திருமருகல் அருகே கணபதிபுரத்தில் நடைபெற்றது. சங்கத்தின் ஒன்றிய செயலாளா் ஜி. பாரதி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், சங்க ஒன்றியக் குழு உறுப்பினா் முருகபாண... மேலும் பார்க்க