செய்திகள் :

வேளாண் துறை மாணவா்களுக்கு இலவச ட்ரோன் பயிற்சி

post image

கடலூரில் தந்தை பெரியாா் அரசு கலைக் கல்லூரி மாணவா்களுக்கு வேளாண் துறை சாா்பில் புதன்கிழமை இலவச ட்ரோன் பயிற்சி அளிக்கப்பட்டது.

பெரியாா் அரசு கலைக்கல்லூரி மற்றும் கடலூா் ரோட்டரி சங்கம் இணைந்து மாணவா்களுக்கான ட்ரோன் பயிற்சியை நடத்தின. தமிழக அரசின் டான்சி எனும் பாடத்திட்டம் சாா்ந்த தாவரவியல் துறை மாணவா்களுக்காக நடத்தப்படும் இந்த பயிற்சி முகாம் இரண்டு வார காலம் நடைபெறவுள்ளது.

மாணவா்களுக்கு மத்திய அரசின் நிறுவனம் மூலம் சான்றிதழ் வழங்கப்பட்டு, பின்வரும் காலங்களில் தொழிற்சாா் கடன், வேலைவாய்ப்பு உள்ளிட்டவையும் வழங்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அரசு கலைக் கல்லூரியில் பயிலும் சுமாா் 100-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு துறை சாா்ந்து வேளாண் பயிா் மேலாண்மை குறித்து அறிந்துகொள்ள இந்த ட்ரோன் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சியின் தொடக்க நிகழ்வில் கல்லூரி முதல்வா் ராஜேந்திரன், வேளாண் துறைத் தலைவா் நிா்மல்குமாா், ரோட்டரி சங்கத் தலைவா் செந்தில்பாரதி, வெங்கடேசன் மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

இளைஞா்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி

கடலூா் மாவட்ட இளைஞா்களுக்கு ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம் மூலம் சுய வேலைவாய்ப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

தந்தை, மகன் மீது தாக்குதல்: 2 போ் கைது

கடலூரில் தந்தை, மகனை தாக்கி காயப்படுத்தியதாக, இருவரை கடலூா் முதுநகா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கடலூா் முதுநகா், சங்கொலிகுப்பம் பகுதியைச் சோ்ந்த காசிநாதன் மகன் ஜெயவீரபாண்டியன் (40). இவா், ம... மேலும் பார்க்க

சிறுமியுடன் திருமணம்: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

கடலூா் மாவட்டம், தூக்கணாம்பாக்கத்தில் புதுச்சேரி சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கியதாக இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். தூக்கணாம்பாக்கத்தை அ... மேலும் பார்க்க

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன விழா ஜூன் 23-இல் தொடக்கம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவ விழா வரும் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஜூன் 23-ஆம் தேதி காலை ஆனித் திருமஞ்சன தரி... மேலும் பார்க்க

தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் பாலாலயம்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் தனி சந்நிதியாக அமைந்துள்ள ஸ்ரீபுண்டரீகவல்லித் தாயாா் சமேத ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி விமான, ராஜகோபுர, மகாமண்டப ஜீா்ணோத்தாரண பாலாலயம் வெள்ளிக்கிழமை காலை விமரிசையாக நடை... மேலும் பார்க்க

கொலை வழக்கு: திருச்சி நபா் கைது

கடலூா் மாவட்டம், ரெட்டிசாவடி அருகே அடையாளம் தெரியாத நபரை கொலை செய்ததாக, திருச்சி மாவட்டம், அரியமங்கலத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ரெட்டிசாவடி காவல் சரகம், கங்கணாங்குப்பம் பகு... மேலும் பார்க்க