செய்திகள் :

``வேளாண் மசோதா போன்று வக்ஃப் திருத்த மசோதா-வை திரும்பப் பெற வைப்போம்'' - ஜவாஹிருல்லா

post image

மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஜுலை 6 ஆம் தேதி மாநாடு மற்றும் பேரணி மதுரை வண்டியூர் பகுதியில் நடைபெற உள்ளது. அதற்கான தொடக்க விழாவில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போது, "மக்கள் தொகைக்கேற்ப ஊராட்சி மன்றம் முதல் நாடாளுமன்றம் வரையில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும், வக்ஃப் திருத்த சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என இரண்டு கோரிக்கைகளை முன்னிறுத்தி ஜூலை 6 ஆம் தேதி மதுரையில் எழுச்சிப்பேரணியும், 5 லட்சம் பேர் கலந்துகொள்ளும் மாநாடும் நடைபெறவுள்ளது.

வக்பு திருத்தச் சட்டம்
வக்பு திருத்தச் சட்டம்

நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் கடந்தும் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. குறிப்பாக நாடாளுமன்றத்தில் முஸ்லிம்கள் 80 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 24 பேர் மட்டும் உள்ளனர்.

இதேபோல் சட்டமன்றங்களிலும் குறைவான பிரதிநிதித்துவமே உள்ளது. சென்னை மாநகராட்சியில் 200 கவுன்சிலர்களில் 4 பேர் மட்டும்தான் முஸ்லிம் உள்ளனர். சட்டம் இயற்றும் மன்றங்களில் முஸ்லிம்களுக்கு பிரத்திநிதித்துவம் கொடுப்பதுதான் ஜனநாயாகத்திற்கு நல்லது.

வக்ஃப் திருத்த சட்டம் தீய நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. உ.பி- யில் முஸ்லிம்களின் இடங்கள் புல்டோசர்கள் கொண்டு இடிக்கப்பட்டது, வக்ஃப் திருத்த சட்டம் மற்றொரு புல்டோசர் என்று சொல்லும் அளவுக்கு உள்ளது.

இச்சட்டத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ள நிலையில், தற்போது உமித் போர்ட் மூலம் வக்ஃப் சொத்துக்களின் ஆவணங்களை பதிவு செய்யவேண்டும் என்று கூறுவது உச்சநீதிமன்ற உத்தரவிற்கு எதிராக உள்ளது.

ஜவாஹிருல்லா

வேளாண் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற்றதைப் போன்று வக்பு திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறும் வரையில் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வெற்றி பெறுவோம்.

2026 ஆம் ஆண்டு தேர்தலிலும் திமுக கூட்டணியில்தான் தொடர்வோம். திமுக அரசு சிறப்பாக செயல்படுகிறது. எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறது.

தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு உதவித்தொகை வழங்குவது, மகளிர் உரிமைத் தொகை வழங்குவதன் மூலம் திமுக ஆட்சிக்கு மக்கள் நன்றி சொல்லக் கூடிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்றத் தேர்தலின் போதும், நாடாளுமன்றத் தேர்தலின் போதும் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கட்சிகளும் முஸ்லிம்களுக்கு அதிக இடங்களில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது எங்களின் கோரிக்கையாகும். கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் வரலாற்றில் கூட்டணி ஆட்சி என்பதற்கு வாய்ப்பே இல்லை என்கிற யதார்த்தம் அது புரியாமல் சிலர் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்" என்றார்.

அதிமுகவிற்கு பாஜக சுமையா? - சீமான் பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் பதில்

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் ”மனதின் குரல்” நிகழ்ச்சி நடந்தது. இதில், தமிழக பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொள்வ... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஆசனவாயில் வெடிப்பு, வலி.. அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வா?

Doctor Vikatan: என்மனைவிக்கு 36 வயதாகிறது. அவருக்கு கடந்த 6 மாதங்களாக மலம் கழிக்கும்போது கடுமையான வலி இருப்பதாகச் சொல்கிறார். சில நேரங்களில் ரத்தமும்வெளியேறுவதாகச்சொல்கிறார். இந்தப் பிரச்னைக்கு அறுவை ... மேலும் பார்க்க

``மும்பையில் இந்தி எதிர்ப்பு பேரணி'' - 20 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த தாக்கரே சகோதரர்கள்

மகாராஷ்டிராவில் கடந்த 2005-ம் ஆண்டு சிவசேனாவில் இருந்து ராஜ் தாக்கரே வெளியேறினார். சிவசேனா நிறுவன தலைவர் பால்தாக்கரேயின் மகன் உத்தவ் தாக்கரேயுடன் ஏற்பட்ட அதிகாரப்போட்டி காரணமாக கட்சியில் இருந்து வெளிய... மேலும் பார்க்க

TVK: `தமிழ்நாடு என்றாலே ஒன்றிய அரசுக்கு அலர்ஜி!' - தேர்தல் ஆணையத்துக்கு எதிராக கொந்தளிக்கும் தவெக

விஜய்யின் தவெகவின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜூனா பீகார் தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் முன்னெடுத்திருக்கும் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து ஒரு அறிக்கையை வெளி... மேலும் பார்க்க

Seeman: ``பாமக விரிசலை சிமெண்டால் அல்ல; அன்பால் பூச வேண்டும்!'' - வழி சொல்லும் சீமான்!

'சீமான் செய்தியாளர் சந்திப்பு!'நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத... மேலும் பார்க்க

Marina Beach: `ப்ளூ பிளாக்' அங்கீகாரம் பெறும் மெரினா பீச்; என்னென்ன வசதிகள் அமைய உள்ளது?

மெரினா பீச் விரைவில் 'ப்ளூ பிளாக்' (Blue Flag) அங்கீகாரம் பெறப்போகிறதுப்ளூ பிளாக் சான்றிதழ் என்றால் சுத்தமான, பாதுகாப்பான, சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ற கடற்கரை என்பதற்கான அடையாளம் ஆகும். ஆக, மெரினா பீச்... மேலும் பார்க்க