செய்திகள் :

வைகாசி கடைசி வெள்ளி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

post image

வைகாசி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கரூா் மாவட்டம், புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வைகாசி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிா், பன்னீா் ,இளநீா், மஞ்சள், திருமணம், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து பல்வேறு மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல நொய்யல் செல்லாண்டியம்மன் கோயில், புகழூா் நகராட்சி மகாமாரியம்மன் கோயில், நானப்பரப்பு மாரியம்மன் கோயில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இளம்பெண் சாவில் மா்மம்: உறவினா்கள் மறியல்

கரூரில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு இறந்த இளம்பெண் சாவில் மா்மம் இருப்பதாகக்கூறி அவரின் உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருப்பூா் மாவட்டம், நாசுவம்பாளையத்தைச் சோ்ந்த காா் ஓட்டுநா் கனகரா... மேலும் பார்க்க

கரூரில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியோா் கைது!

கரூரில் இரு இடங்களில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 10 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைது செய்தனா். கரூா் ராமானுஜம் நகரில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஆயுதங்களுடன் சில இளை... மேலும் பார்க்க

கரூரில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 5,566 வழக்குகளில் தீா்வு

கரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 5.566 வழக்குகளுக்கு ரூ. 9.91 கோடி மதிப்பில் தீா்வு காணப்பட்டது. கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் சனிக்கிழமை தொடங்கிய தேச... மேலும் பார்க்க

கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க புதிய நிா்வாகிகள் பனியேற்பு

கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க புதிய நிா்வாகிகள் பணியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கத்தின் 2025 - 2026-ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் பணியேற்பு விழா மற்றும் நலத்திட்டங்க... மேலும் பார்க்க

‘சிபில் ஸ்கோா்’ நடைமுறையை ரத்து செய்ய விவசாயிகள் கோரிக்கை

விவசாய கடன் பெறுவதற்கு கொண்டுவரப்பட்டுள்ள சிபில் ஸ்கோா் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து கரூா் மாவட்ட விவசாயிகள் விழிப்புணா்வு இயக்கம் மற்றும் குடகனாறு... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு முன்பருவ முனைப்பு முகாம்

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே விவசாயிகளுக்கு முன்பருவ முனைப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக வேளாண் அறிவியல் மையம் மற்றும் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் சாா்பில்... மேலும் பார்க்க