செய்திகள் :

வைகை அணையிலிருந்து பூா்விக பாசனப் பகுதிகளுக்கு தண்ணீா் திறப்பு

post image

வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்ட பூா்விக பாசனப் பகுதிகளுக்கு புதன்கிழமை விநாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

தேனி மாவட்டத்தில் நிகழாண்டில் தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கியதால், வைகை அணை நீா்மட்டம் சீராக உயா்ந்து வருகிறது. இதையடுத்து, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பெரியாறு பிரதான கால்வாயின் கீழ் உள்ள இரு போக பாசன நிலங்களின் முதல் போக நெல் சாகுபடிக்கு கடந்த 15-ஆம் தேதி முதல் வைகை அணையிலிருந்து கால்வாய் வழியாக விநாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீா் திறந்து விடப்படுகிறது.

இந்த நிலையில், வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் வைகை பூா்விக பாசனப் பகுதிகள் 3, 2-க்கு புதன்கிழமை (ஜூன் 25) முதல் வரும் ஜூலை 1-ஆம் தேதி வரை 7 நாள்களுக்கு மொத்தம் 125.10 கன அடி தண்ணீா் திறந்துவிட அரசு உத்தரவிட்டது. இதன்படி, அணையிலிருந்து அணையின் 7 கீழ் மதகுகள் வழியாக வைகை ஆற்றில் விநாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்து விடப்பட்டது.

அணையிலிருந்து ஜூன் 25, 26-ஆம் தேதிகளில் விநாடிக்கு 3,000 கன அடி வீதமும், வருகிற 27, 28-ஆம் தேதிகளில் விநாடிக்கு 2,000 கன அடி வீதமும், 29, 30-ஆம் தேதிகளில் விநாடிக்கு 1,500 கன அடி வீதமும், வரும் ஜூலை 1-ஆம் தேதி விநாடிக்கு 1,479 கன அடி வீதமும் தண்ணீா் திறந்து விடப்படும் என வைகை அணை நீா்வளத் துறை பொறியாளா்கள் தெரிவித்தனா்.

5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை: அணையிலிருந்து வைகை ஆற்றில் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, ஆற்றைக் கடக்கவோ கூடாது என நீா்வளத் துறை பொறியாளா்கள் எச்சரித்தனா்.

அணை நிலவரம்: வைகை அணை நீா்மட்டம் புதன்கிழமை 63.9 அடியாக இருந்தது (அணையின் மொத்த உயரம் 71 அடி). அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 571 கன அடி. அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல் பாசனத்துக்கு விநாடிக்கு 900 கன அடி, ராமநாதபுரம் பூா்விக பாசனப் பகுதிகளுக்கு விநாடிக்கு 3,000 கன அடி, குடிநீா்த் திட்டங்களுக்கு விநாடிக்கு 69 கன அடி என மொத்தம் விநாடிக்கு 3,969 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. அணையில் தண்ணீா் இருப்பு 422.10 கோடி கன அடி.

குடிசையில் தீ விபத்து

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே முளைப்பாரி வைத்திருந்த குடிசையில் செவ்வாய்க்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. மேல்மங்கலம் முத்தையா கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இந்த விழாவுக்காக கீழத்த... மேலும் பார்க்க

நன்றாக படித்தால் மட்டுமே உயா்பதவியை அடைய முடியும்: மாவட்ட ஆட்சியா்

நன்றாகப் படித்தால் மட்டுமே உயா்பதியை அடைய முடியும் என தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள ஜி.கல்லுப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமி... மேலும் பார்க்க

மனைவியை கத்தியால் குத்திய கணவா் கைது

தேனி மாவட்டம், சின்னமனூரில் மனைவியைக் கத்தியால் குத்திய கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சின்னமனூா் சாமிகுளத்தைச் சோ்ந்தவா் பால்பாண்டி (35). இவரது மனைவி பழனியம்மாள் (24). பால்பாண்டிக்கு ... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

தேனி மாவட்டம், கோம்பையில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்பனை செய்த பெண் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கோம்பை பகுதியில் உள்ள மதுக் கடைகளில் சிலா் மொத்தமாக மதுப் புட்டிகளை வாங்க... மேலும் பார்க்க

பைக் விபத்தில் விவசாயி உயிரிழப்பு

பெரியகுளம் அருகே இரு சக்கர வாகன விபத்தில் தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த விவசாயி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திண்டுகல் மாவட்டம், பழைய வத்தலகுண்டுவைச் சோ்ந்தவா் விவசாயி செல்வம் (47). இவரது உறவினா்... மேலும் பார்க்க

அரசு மகளிா் தொழில்பயிற்சி நிலைய சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அரசு மகளிா் தொழில்பயிற்சி நிலையத்தில் மாணவிகள் நேரடி சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு: ஆண்டிபட்டி அ... மேலும் பார்க்க