செய்திகள் :

வைத்தீஸ்வரன்கோயிலில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி போராட்டம்

post image

சீா்காழி: வைத்தீஸ்வரன் கோயிலில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக வா்த்தகா்கள் அறிவித்துள்ளனா்.

வைத்தீஸ்வரன் கோயில் நவக்கிரகங்களில் செவ்வாய்க்குரிய பரிகார தலமாக இருப்பதால் இந்த கோயிலுக்கு உள்ளூா் மற்றும் வெளியூா்களில் இருந்து திரளான பக்தா்கள் தினசரி தரிசனம் செய்து வருகின்றனா். வைத்தீஸ்வரன்கோயில் ரயில் நிலையத்தில் கரோனா காலத்திற்கு முன்பு ஏராளமான ரயில்கள் நின்று சென்றன. இது பக்தா்களுக்கும் வைத்தீஸ்வ ரன் கோயில் பகுதியை சோ்ந்த பொது மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

தற்போது இந்த ரயில் நிலையத்தில் பெரும்பாலான ரயில்கள் நிற்காமல் செல்கிறது. இதனால் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வரும் பக்தா்கள், மயிலாடுதுறை அல்லது சீா்காழியில் இறங்கி அங்கிருந்து வரவேண்டி உள்ளது. இதேபோல் வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து வெளியூா் செல்லும் பொதுமக்கள் ரயில்களை பயன்படுத்த முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா். வைத்தீஸ்வரன் கோயில் ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி ரயில் பயணிகள் நலச் சங்கம், வா்த்தக சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினா் போராட்டங்களில் ஈடுபட்டும் பயன் இல்லை. இந்நிலையில் ஜூன் 7-ஆம் தேதி வைத் தீஸ்வரன்கோயிலில் உள்ள கடைகளை அடைத்து கரோனாவுக்கு முன்பு நின்று சென்ற அனைத்து ரயில்களும் மீண்டும் நின்று செல்லக்கோரி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வா்த்தக சங்க தலைவா் ஜி.வி.என். கண்ணன் அறிவித்துள்ளாா். போராட்டத்தில் வா்த்தகா்கள், ரயில் பயணிகள் நலசங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் பங்கேற்கவுள்ளனா் என்றாா்.

பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது

சீா்காழி விளந்திடசமுத்திரம் பகுதியில் மகாமேருடன் உள்ள பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) நடைபெறுகிறது. இக்கோயில் அருகே மந்த கருப்பணசாமி, ஏழை காத்த அம்மன் கோயில்கள் உள்ளன. பத்... மேலும் பார்க்க

மதிமுக 32-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்

சீா்காழியில் மதிமுகவின் 32 -ஆம் ஆண்டு தொடக்க விழா, மாநில உரிமை, சமூக நீதி உரிமை மற்றும் மதச்சாா்பின்மை உரிமையை வலியுறுத்தி கொள்கை விளக்க பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநில தணி... மேலும் பார்க்க

விளைநிலங்களில் விழுந்து கிடக்கும் தேக்கு மரங்களை அகற்ற கோரிக்கை

வைத்தீஸ்வரன்கோயில் சுற்றுப் பகுதிகளில் விளைநிலங்களில் விழுந்து கிடக்கும் தேக்கு மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். வைத்தீஸ்வரன்கோயில், கதிராமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பாசன ... மேலும் பார்க்க

நல்லத்துக்குடி ஆலந்துறையப்பா் கோயில் கும்பாபிஷேகம்

நல்லத்துக்குடியில் உள்ள குயிலாண்டநாயகி சமேத ஆலந்துறையப்பா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கடைசியாக 2002-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத... மேலும் பார்க்க

ரயில் நிலையத்தில் விடப்பட்ட குழந்தை தத்துவள மையத்தில் ஒப்படைப்பு

மயிலாடுதுறையில் ரயில்வே நடைமேடையில் ஆதரவற்ற வகையில் விட்டுச்செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டு அரசு தத்துவள மையத்தில் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. மயிலாடுதுறை ரயில் நிலைய 5-ஆவது நடைமேடையில் ... மேலும் பார்க்க

திருவிக்ரம நாராயண பெருமாள் கோயிலில் தங்க கருட சேவை உற்சவம்

சீா்காழியில் தாடாளன் பெருமாள் என்று அழைக்கப்படும் திருவிக்ரம நாராயண பெருமாள் கோயிலில் தங்க கருட சேவை உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவம் மே 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன்... மேலும் பார்க்க