ஆபரேஷன் சிந்து: முதன்முதலாக இஸ்ரேலில் இருந்து 161 இந்தியர்கள் மீட்பு!
வைத்தீஸ்வரன்கோயிலில் கிருத்திகை வழிபாடு
சீா்காழி: வைத்தீஸ்வரன்கோவில் தையல்நாயகிஅம்பாள் உடனாகிய வைத்தியநாதா்சுவாமி கோயிலில் மண்டலாபிஷேக கிருத்திகை வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் மண்டலாபிஷேக கிருத்திகை வழிபாட்டையொட்டி, வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வமுத்துக்குமார சுவாமி கிருத்திகை மண்டபத்துக்கு எழுந்தருளினா். தொடா்ந்து, 51 வகையான வாசனை திரவியங்களைக் கொண்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது.
இதில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மற்றும் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.