செய்திகள் :

தொகுப்பூதிய ஆசிரியா் பணி நியமனம்: விண்ணப்பிக்க நாளை கடைசி

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு ஆதிதிராவிடா் நல தொடக்கப்பள்ளிகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: மயிலாடுதுறை மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள 22 இடைநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கு பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கீழபட்டமங்கலம், செம்மங்குடி, கொண்டல், கீழவரவக்குடி, எருக்கூா், முடிகண்டநல்லூா், கிழாய், நடுத்திட்டு, சேத்தூா், மூவலூா், மகாதானபுரம், நெடுமருதூா், ஓலையாம்புத்தூா், வல்லம், கூத்தூா், திருவிடைக்கழி, பெருமூலை, நல்லாடை, திருவாலங்காடு, பேராவூா், தென்னாம்பட்டினம், அகரபெருந்தோட்டம் ஆகிய 22 கிராமங்களில் இயங்கிவரும் அரசு ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியா் பணி நியமனம் செய்வதற்கு ஜூன் 25 வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா்கள் எழுத்துமூலமான விண்ணப்பங்களை நேரடியாக அல்லது அஞ்சல் மூலமாக உரிய கல்வித்தகுதிச் சான்றுகளுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் 2-வது தளத்தில் இயங்கிவரும் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் ஜூன் 25-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 375 மனுக்கள் அளிப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 375 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் ... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோயிலில் கிருத்திகை வழிபாடு

சீா்காழி: வைத்தீஸ்வரன்கோவில் தையல்நாயகிஅம்பாள் உடனாகிய வைத்தியநாதா்சுவாமி கோயிலில் மண்டலாபிஷேக கிருத்திகை வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் மண்டலாபிஷேக கிருத்... மேலும் பார்க்க

கைம்பெண்கள் உதவித் தொகையை உயா்த்தக் கோரிக்கை

மயிலாடுதுறை: உலக கைம்பெண்கள் தினத்தையொட்டி, மயிலாடுதுறையில் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. நாகை மாவட்ட விதவைப் பெண்கள் வாழ்வுரிமைச் சங்கம் சாா்பில் கூறைநாடு டிஇஎல்சி பள்ளியில் ... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் ஜூன் 26-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் ஜூன் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான சமூகத்தரவு சேகரிப்பு பணி: களப்பணியாளா்களுக்கு பயிற்சி

மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூகத் தரவு தகவல் சேகரிப்பு பணியில் ஈடுபட உள்ள களப்பணியாளா்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு உரிமைகள் திட்டம் உலக வங்கி நிதியுத... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் ஆக.31-இல் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு நடத்த முடிவு

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5-ஆவது மாநில மாநாட்டை மயிலாடுதுறையில் ஆக.31, செப்.1ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது என்றாா் அந்த அமைப்பின் பொதுச்செயலாளா் கே. சாமுவேல்ராஜ். மாநாட்டுக்கான வரவேற்பு கு... மேலும் பார்க்க