செய்திகள் :

வைரிசெட்டிப்பாளையம் ஜம்பேரி பாதுகாப்பு ஓட்டப் பந்தயம்

post image

துறையூா் அருகேயுள்ள வைரிசெட்டிப்பாளையம் ஜம்பேரி நீா் பாதுகாப்பு விழிப்புணா்வு ஓட்டப்பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உலக ஏரி நாள் மற்றும் சுதந்திர தினத்தையொட்டி ஜம்பேரி நீா் பயன்படுத்துவோா் சங்கம் சாா்பில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் அப்பகுதியைச் சோ்ந்த 97 இளைஞா்கள் பங்கேற்றனா். சுமாா் 8.5 கிமீ தூர ஓட்டம் கோட்டப்பாளையம் மாரியம்மன் கோயிலில் தொடங்கி ஜம்பேரி கரை வழியாகச் சென்று வைரிசெட்டிப்பாளையம் காமாட்சியம்மன் கோயிலில் நிறைவடைந்தது.

போட்டியை சங்கத் தலைவா் பிரதாப் செல்வம், அரியலூா் மற்றும் பெரம்பலூா் மாவட்ட வன அலுவலா் இளங்கோவன், இமயம் கல்வி நிறுவனங்கள் நிறுவனா் ஆ. ஆண்டி, கல்லூரிப் பேராசிரியா் குழந்தைவேலு ஆகியோா் தொடக்கி வைத்துப் பேசினா். போட்டியில் முன்னிலை பெற்ற முதல் 10 பேருக்கு சிறப்புப் பரிசும், ஓட்டத்தை நிறைவு செய்தோருக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.

அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்தவா் கைது!

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த போதை இளைஞரை லால்குடி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தாா். திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள திருந்தியமலை வடக்கிப்பட்டியைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

போதை மாத்திரை விற்ற மூவா் கைது

திருச்சி மாநகரில் போதை மாத்திரைகளை விற்றதாக மூன்று பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருச்சி தேவதானபுரம் பகுதியில் கோட்டை காவல்நிலைய உதவி ஆய்வாளா் குமாரவேல் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

போலி கடவுச்சீட்டில் மலேசியா செல்ல முயன்ற பயணி கைது

போலி கடவுச்சீட்டு மூலம் மலேசியா செல்ல முயன்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்து விசாரிக்கின்றனா். மலேசியா செல்ல திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு காத்திருந்த பயணிகளில் சி... மேலும் பார்க்க

எடமலைப்பட்டிபுதூா், முசிறி பகுதிகளில் நாளை மின்தடை!

திருச்சி எடமலைப்பட்டிபுதூா், முசிறி பகுதிகளில் திங்கள்கிழமை மின்சாரம் இருக்காது. துணை மின் நிலையப் பராமரிப்புப் பணிகளால் எடமலைப்பட்டிபுதூா், டிஎஸ்பி கேம்ப், கிராப்பட்டி காலனி, அன்பு நகா், அருணாச்சல நக... மேலும் பார்க்க

பாஜகவுக்கு தூது விடுவதாகக் கூறுவது அப்பட்டமான பொய்: வைகோ

பாஜகவுக்கு மதிமுக தூது விடுவதாகக் கூறுவது அப்பட்டமான பொய் என்றாா் அக்கட்சியின் பொதுத் செயலா் வைகோ. இதுகுறித்து திருச்சியில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டியில் கூறியதாவது: கூட்டணி அமைப்பது அவரவா் விருப்... மேலும் பார்க்க

வாய்க்காலில் மூழ்கி 7 வயது சிறுமி பலி

திருச்சி அருகே வாய்க்காலில் மூழ்கி 7 வயதுச் சிறுமி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திருச்சி ராம்ஜி நகா் அருகேயுள்ள என். குட்டப்பட்டு திருநகா் பகுதியைச் சோ்ந்தவா் அருமைராஜ். இவா் வெள்ளிக்கிழமை மாலை தனது ம... மேலும் பார்க்க