செய்திகள் :

வோடபோன் ஐடியா பங்குகள் 2% மேல் உயர்ந்து முடிவு!

post image

புதுதில்லி: வோடபோன் ஐடியாவின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் சரிவிலிருந்து மீண்டு, வர்த்தக முடிவில் 2 சதவிகிதம் வரை உயர்ந்து முடிவடைந்தது.

கடனில் சிக்கித் தவிக்கும் தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியாவை, திறந்த சந்தை பரிவர்த்தனை மூலம் கிட்டத்தட்ட 1 சதவீத பங்குகளை ரூ.428 கோடிக்கு எரிக்சன் இந்தியா விற்பனை செய்ததையடுத்து வோடபோன் ஐடியா பங்கின் விலை கிட்டத்தட்ட 2 சதவிகிதம் சரிந்து.

மும்பை பங்குச் சந்தையில் இன்றைய காலை வர்த்தகத்தின் போது பங்கின் விலை 1.91 சதவிகிதம் சரிந்து ரூ.6.65 ஆக இருந்தது. அதே வேளையில் என்எஸ்இ-யில் இது 1.77 சதவிகிதம் குறைந்து ரூ.6.65 ஆக இருந்தது. பின்னர் நடைபெற்ற வர்த்தகத்தில் மீட்டெழுந்து ரூ.6.91 ஆக முடிவடைந்தது.

பிஎஸ்இயில் மொத்த ஒப்பந்தத் தரவுகளின்படி, எரிக்சன் இந்தியா, மும்பையைச் சேர்ந்த வோடபோன் ஐடியாவின் 63.37 கோடிக்கும் அதிகமான பங்குகளை விற்பனை செய்தது. இது வோடபோன் ஐடியாவின் 0.9 சதவிகித பங்குகள் ஆகும். பங்குகள் ஒவ்வொன்றும் ரூ.6.76 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டன. இதன் பரிவர்த்தனை மதிப்பு ரூ.428.44 கோடி.

கடந்த வாரம், வோடபோன் ஐடியா மார்ச் காலாண்டிற்கான இழப்புகள் ரூ.7,166.1 கோடியாகக் குறைந்துள்ளதாகவும், அதன் வாரியம் ரூ.20,000 கோடி வரை நிதி திரட்ட ஒப்புதல் அளித்ததாகவும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஐபிஓ வெளியீட்டு விலைக்கு இணையாக பட்டியலிடப்பட்ட ஸ்கோடா டியூப்ஸ்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.85.68 ஆக நிறைவு!

மும்பை: ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை எதிர்பார்த்ததை விட அதிகமாக 50 அடிப்படை புள்ளிகள் குறைத்ததைத் தொடர்ந்து, இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ... மேலும் பார்க்க

ரெப்போ விகிதம் குறைப்பு எதிரொலி: பங்குச் சந்தை உயர்ந்து முடிவு!

மும்பை: ரிசர்வ் வங்கி எதிர்பார்த்ததை விட 50 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதங்களைக் குறைத்து, பொருளாதாரத்தை ஆதரிக்கும் வகையில் பணப்புழக்கத்தை வழங்க வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தைக் குறைத்ததைத் தொ... மேலும் பார்க்க

தொடர்ந்து 3-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 800 புள்ளிகள் உயர்வு!

தொடர்ந்து 3-வது நாளாக பங்குச் சந்தை இன்று(வெள்ளிக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,434.24 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை... மேலும் பார்க்க

தங்கம் வாங்க இன்று நல்ல நாள்.. ஏன் தெரியுமா? விலைதான்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.73,040-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.புதன்கிழமை தங்கம் விலை ரூ.8... மேலும் பார்க்க

ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு! வீடு, வாகன கடனுக்கான வட்டி குறைய வாய்ப்பு!

ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவிகிதம் குறைப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.ரிசர்வ் வங்கியின் ஜூன் மாதத்துக்கான நிதிக் கொள்கை ஆலோசனைக் கூட்டம் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் புதன்கிழமை முத... மேலும் பார்க்க

இந்திய சேவைகள் துறையில் மிதமான வளா்ச்சி

இந்திய சேவைகள் துறை கடந்த மே மாதம் மிதமான ஏற்றம் கண்டுள்ளது. இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சேவைகள் துறையில் தொழில் நடவ... மேலும் பார்க்க