செய்திகள் :

ஷிண்டே அணி எம்எல்ஏவுக்கு மகாராஷ்டிர முதல்வர் கண்டனம்!

post image

சிவசேனை எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட், உணவக ஊழியரைத் தாக்கியதற்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் புல்தானா தொகுதி ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனை எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட். இவர் மும்பை சர்ச்கேட்டில் உள்ள எம்எல்ஏ விடுதியில் தங்கியுள்ளார்.

நேற்று(செவ்வாய்க்கிழமை) இரவு எம்எல்ஏ விடுதி உணவகத்தில் கெட்டுப்போன உணவு அளித்ததாக உணவக சமையல்காரரை சரமாரியாக தாக்கினார்.

இதுதொடர்பான விடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வைரலான நிலையில், தான் செய்தது தவறல்ல என்றும் இதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என்றும் சஞ்சய் ஜெய்க்வாட் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், இதுபோன்ற நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று சஞ்சய் ஜெய்க்வாட்டுக்கு கண்டனம் தெரிவித்தார்.

மேலும், கெய்க்வாட்டின் நடவடிக்கை அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களின் நற்பெயருக்கும் களங்கம் விளைவித்துள்ளது, மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Maharashtra Chief Minister Devendra Fadnavis has condemned Shiv Sena MLA Sanjay Gaikwad for attacking a restaurant worker.

இதையும் படிக்க : கெட்டுப்போன உணவு! உணவக ஊழியரைத் தாக்கிய சிவசேனை எம்எல்ஏ!

தில்லி, ஹரியாணாவில் நிலநடுக்கம்!

தில்லியில் வியாழக்கிழமை காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வுகள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக தேசிய நில அதிர்வுகள் ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஹரியாணா மாநில... மேலும் பார்க்க

குஜராத் பால விபத்து: பலி 11-ஆக உயர்வு; தொடரும் மீட்புப் பணி!

குஜராத் பால விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.குஜராத்தின் வதோதரா, ஆனந்த் ஆகிய மாவட்டங்களுக்கு இடையே மஹிசாகா் ஆற்றி... மேலும் பார்க்க

பொது வேலைநிறுத்தத்தால் மேற்கு வங்கம், கேரளத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களில் மத்திய தொழிற்சங்கள் கூட்டமைப்பின் அழைப்பின்பேரில் புதன்கிழமை நடைபெற்ற நாடுதழுவிய பொது வேலைநிறுத்தத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் சில இ... மேலும் பார்க்க

ஐரோப்பாவில் ஊக்கத்தொகையுடன் உயா்க்கல்வி பயில 101 இந்திய மாணவா்கள் தோ்வு!

ஐரோப்பிய நாடுகளில் 2 ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பை ‘எராஸ்மஸ் பிளஸ்’ ஊக்கத்தொகையுடன் பயில, நடப்பு 2025-26-ஆம் கல்வியாண்டில் 50 மாணவிகள் உள்பட 101 இந்திய மாணவா்கள் தோ்வாகியுள்ளனா். ஐரோப்பிய ஒன்றியத்தின்... மேலும் பார்க்க

ரூ.72,000 கோடி ‘கிரேட் நிகோபாா்’ திட்டம்: தேசிய பழங்குடியினா் ஆணையம் தகவலளிக்க மறுப்பு

கிரேட் நிகோபாா் தீவில் ரூ.72 ஆயிரம் கோடியில் மேற்கொள்ளப்பட உள்ள மிகப் பெரிய உள்கட்டமைப்புத் திட்டம் குறித்து தகவல் அளிக்க தேசிய பழங்குடியினா் ஆணையம் மறுத்துள்ளது. அந்தமான்-நிகோபாா் யூனியன் பிரதேசத்தில... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: போா் விமானம் விழுந்து நொறுங்கி இரு விமானிகள் உயிரிழப்பு; 5 மாதங்களில் 3வது சம்பவம்

ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் இந்திய விமானப் படையின் ஜாகுவாா் பயிற்சி விமானம் திடீரென விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இரு விமானிகள் உயிரிழந்தனா். இந்தச் சம்பவத்துக்கான காரணத்தை... மேலும் பார்க்க