செய்திகள் :

`ஷிண்டே துரோகி’ என்று சொன்ன காமெடி நடிகர் - படப்பிடிப்பு நடந்த ஸ்டூடியோவை இடித்த மாநகராட்சி

post image

மும்பையில் நேற்று முந்தினம் இரவு நடந்த காமெடி ஷோவில் காமெடி நடிகர் குனால் கம்ரா, இந்தி பாடல் ஒன்றை மாற்றி அமைத்து பாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இப்பாடலில் மகாராஷ்டிரா துனை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயை துரோகி என்று குறிப்பிடப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இதனால் சிவசேனா தொண்டர்கள் நேற்று இரவே காமெடி ஷோவின் படப்பிடிப்பு நடத்தப்பட்ட மும்பை ஸ்டூடியோவில் புகுந்து அடித்து சூரையாடினர்.

இதையடுத்து சிவசேனா தொண்டர்கள் 19 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 11 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.  அதோடு ஷோ நடத்திய குனால் கம்ரா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யவேண்டும் என்று கோரி போலீஸில் சிவசேனாவினர் புகார் செய்தனர். இதையடுத்து கம்ரா மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஸ்டூடியோ இருக்கும்ஹோட்டல்

காமெடி ஷோவின் படப்பிடிப்பு மும்பை கார்ரோடு பகுதியில் உள்ள ஸ்டூடியோவில் நடந்தது. தற்போது தலைமறைவாக இருக்கும் குனால் கம்ரா கொடும்பாவியை சிவசேனா தொண்டர்கள் எரித்து போராட்டம் நடத்தினர். போலீஸார் வழக்கு பதிவு செய்ததை தொடர்ந்து அவர் தற்போது தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

அவர் தமிழ்நாட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்விவகார்த்தில் குனால் மன்னிப்புப்கேட்க வேண்டும் என்று மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்து இருந்தார். அவர் உத்தவ் தாக்கரே கட்சியில் பணம் வாங்கிக்கொண்டு ஏக்நாத் ஷிண்டேயை விமர்சித்ததாக அவரது கட்சியினர் குற்றம் சாட்டி இருந்தனர்.

அவர்களது குற்றச்சாட்டை மறுத்துள்ள குனால் கம்ரா தான் யாரிடமும் பணம் வாங்கவில்லை என்று தெரிவித்துள்ளார். அதோடு தேவைப்பட்டால் எனது வங்கிக்கணக்கு விபரங்களை பார்த்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் காமெடி ஷோ படப்பிடிப்பு நடந்த மும்பை ஸ்டூடியோவில் சட்டவிரோதமாக கட்டுமானப்பணி மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக கூறி முன்னறிவிப்பு இல்லாமல் மாநகராட்சி அதிகாரிகள் இடித்துள்ளனர்.

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் ஏற்கனவே, கிரிமினல்கள் வீடுகளை, சொத்துக்களை புல்டோசர் கொண்டு இடித்து வந்தனர். அதே கலாச்சாரம் மகாஷ்டிராவிலும் தொடர்கிறது. மாநகராட்சியின் நடவடிக்கையை கண்டித்த உத்தவ் தாக்கரே காமெடி நடிகர் உண்மையைத்தானே பேசி இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்

`எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம்' - குணால் கம்ராவை கைது செய்ய சிவசேனா அமைச்சர் கோரிக்கை

மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவில் இருந்து வெளியில் வந்ததை சித்திரிக்கும் விதமாக, அவரை துரோகி என்று விமர்சித்து காமெடி நடிகர் குணால் கம்ரா காமெடி ஷோவில் பாடினார். மும்பையில் இக்காமெட... மேலும் பார்க்க

Myanmar Earthquake: மியான்மாரில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படக் காரணம் என்ன?

மியான்மாரில் 7.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு நாட்டையே உலுக்கியுள்ளது.இந்த நிலநடுக்கம் சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள... மேலும் பார்க்க

தெலுங்கானா: ஒரே நேரத்தில் இரண்டு பெண்களைத் திருமணம் செய்த வாலிபர்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

இந்து திருமணச் சட்டத்தில் ஒரே நேரத்தில் ஒருவரை மட்டுமே திருமணம் செய்ய முடியும். இரண்டாவது திருமணம் செய்வதாக இருந்தால் முதலில் திருமணம் செய்த நபரை விவாகரத்து செய்யவேண்டும். ஆனால் சில நேரங்களில் சட்டவிர... மேலும் பார்க்க

64 ஆண்டுகளுக்குப் பிறகுப் பேரப்பிள்ளைகள் நடத்தி வைத்த திருமணம்; நெகிழ வைக்கும் குஜராத் ஜோடி!

64 ஆண்டுகளுக்கு முன்பே குஜராத்தைச் சேர்ந்த ஒரு ஜோடி காதலித்து வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து இருக்கிறது.64 ஆண்டுகளுக்கு முன்பு காதல் என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. ஆனால் அப்படிப... மேலும் பார்க்க

Life On Boat: வீடு, உடைமைகளை விற்று, பாய்மரப்படகில் குடியேறிய இந்திய குடும்பம்- கனவு நனவானது எப்படி?

கப்பலில் தங்களது முழு நேர வாழ்க்கையும் வாழ்ந்து வருகிறது ஓர் இந்திய குடும்பம். முன்னாள் இந்திய கடற்படை அதிகாரியான கேப்டன் கௌரவ் கௌதம் மற்றும் முன்னாள் ஊடக நிபுணரான அவரது மனைவி வைதேகி மற்றும் இவர்களின்... மேலும் பார்க்க

டிக்கெட் வைத்திருக்கும் அதிர்ஷ்டசாலிக்கு ரூ.50,000 பரிசு வழங்கும் மத்திய ரயில்வே - ஏன் தெரியுமா?

மத்திய ரயில்வே (CR) லக்கி யாத்ரி யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது தினசரி உள்ளூர் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது மத்திய ரயில்வே. இந்த திட்டத்தின் மூலம... மேலும் பார்க்க