செய்திகள் :

ஷெல் தாக்குதலுக்குள்ளான மக்களுடன் உமர் அப்துல்லா கலந்துரையாடல்!

post image

பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா பார்வையிட்டு, அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடினார்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி அழித்தது. இதற்குப் பாகிஸ்தான் சார்பிலும் பதில் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து நான்கு நாள்கள் இந்த போர்ப் பதற்றம் நீடித்தது. இதையடுத்து இருநாடு உடன்படிக்கையை அடுத்துப் போர் கைவிடப்பட்டது.

இந்தநிலையில் ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரியின் சலாமாபாத் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் உமர் அப்துல்லா பார்வையிட்டார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸில் பகிர்ந்த செய்தியில்,

சமீபத்தில் தாக்குதலின்போது காஷ்மீரின் எல்லைக் கிராமங்களில் வசிக்கும் இடங்களையும், மக்களையும் இன்று நேரில் பார்வையிட்டேன்.

எல்லையோர மக்கள் அனுபவித்த இழப்பும், வலியும் கற்பனை செய்ய முடியாதது. மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுடன் கலந்துரையாடினேன்.

ஜம்மு-காஷ்மீரின் எல்லை மாவட்டங்களில் பாகிஸ்தானின் கடுமையான ஷெல் தாக்குதலால் அவர்களின் குடியிருப்பு கட்டமைப்புகள் சேதமடைந்தன. மேலும் எல்லை கிராமங்களில் வசிக்கும் மக்கள் சேதமடைந்த வீடுகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். விரைவில் அதற்குன்டான பணிகளில் ஈடுபடுவோம் என்று முதல்வர் கூறினார்.

மீண்டும் படப்பிடிப்பில் ஆந்திர துணை முதல்வர்!

ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வர் பவன் கல்யான் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வராக கடந்த 2024-ம் ஆண்டு பதவியேற்றுக்கொண்ட பிரபல நடிக... மேலும் பார்க்க

துருக்கி, அஜர்பைஜான் சுற்றுலா செல்வதற்கான முன்பதிவு 60% சரிவு!

பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்ததால் துருக்கி, அஜர்பைஜான் நாடுகளுக்குச் சுற்றுலா செல்வதற்கான முன்பதிவை இந்தியர்கள் ரத்து செய்துவருகின்றனர். சுற்றுலாத் தலங்களுக்காக பயணத்தை முன்பதிவு செய்யும் இணையதள செயல... மேலும் பார்க்க

அமில வீச்சில் பார்வையிழந்த மாணவி... பிளஸ் 2 தேர்வில் 95.6% எடுத்து சாதனை!

சண்டிகரில் அமில வீச்சில் பார்வையிழந்த மாணவி ஒருவர் பிளஸ் 2 தேர்வில் 95.6% மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். இளம் வயதிலேயே குடும்ப பிரச்னை காரணமாக அண்டை வீட்டைச் சேர்ந்தவர், மாணவி மீது அமிலத்தை வீ... மேலும் பார்க்க

காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் ஷோப்பியன் மாவட்டத்தில் லஷ்கர் பயங்கரவாதிகள் மூன்று பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தெற்... மேலும் பார்க்க

கர்னல் சோஃபியா குறித்து சர்ச்சை: பாஜக அமைச்சர் மீது வழக்குப்பதிய உத்தரவு!

கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சையாகப் பேசிய பாஜக அமைச்சர் விஜய் ஷா மீது வழக்குப் பதிவு செய்ய மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சோஃபியா குரேஷியை, பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களின... மேலும் பார்க்க

6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது மைக்ரோசாஃப்ட்!

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில், 6 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது உலகளவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையில் 3% ஆகும... மேலும் பார்க்க