செய்திகள் :

ஷ்ரத்தா வாக்கரின் தந்தை மரணம்! நீதி கேட்டு போராடியவர்

post image

தில்லியில், திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்த காதலனால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட ஷ்ரத்தா வாக்கரின் தந்தை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

கடந்த 2022ஆம் ஆண்டு காதலனால் படுகொலை செய்யப்பட்ட ஷ்ரத்தா தாஸ் வழக்கில், அஃப்தாப் பூனாவாலா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தனது மகள் கொலை வழக்கில், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தொடர்ந்து அழுத்தம் கொடுத்து, மகளின் சாவுக்கு நியாயம் கேட்டு தொடர்ந்து போராடி வந்த தந்தை விகாஸ் வாக்கர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.

மகாராஷ்டிர மாநிலம் பல்கார் மாவட்டத்தில் தனது இல்லத்தில் உறக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

வீட்டை விட்டு காதலனுடன் வெளியேறி தில்லியில் வசித்து வந்த ஷ்ரத்தா வாக்கர், காதலனால் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பல துண்டுகளாக வெட்டி காட்டுப் பகுதிகளில் வீசப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 6,629 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை தில்லி காவல்துறை தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மகளின் இருப்பிடம் தெரியாமல், காவல்துறையினருக்குப் புகார் தெரிவித்திருந்த விகாஸ் வாக்கர், மகளின் மரணத்துக்கு நியாயம் கேட்டுப் போராடி வந்த நிலையில், அவரும் மாரடைப்பால் மரணம் அடைந்திருப்பது குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடன் வழங்குபவா்கள் தீவால் சட்டத்தின் கீழ் ரூ. 3.58 லட்சம் கோடி மீட்பு: மத்திய அரசு

‘வங்கிகள் உள்ளிட்ட கடன் வழங்குபவா்கள் கடந்த ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி வரை திவால் சட்டத்தின் கீழான உத்தரவாத திட்டத்தின் மூலமாக ரூ. 3.59 லட்சம் கோடியை மீட்டுள்ளனா்’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு த... மேலும் பார்க்க

இணைய குற்ற வங்கிக் கணக்குகளை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: அமித் ஷா

‘இணைய மோசடி மூலம் திருடப்படும் பணத்தை இணைய குற்றவாளிகள் சேமித்து வைக்கும் வங்கிக் கணக்குகளை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது’ என்று மத்திய ... மேலும் பார்க்க

20 நாடுகளில் 6 முக்கிய துறைகளுக்கு ஏற்றுமதி: மத்திய அரசு திட்டம்

அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், பிரேஸில், சீனா உள்ளிட்ட 20 நாடுகளில் பொருட்கள் மற்றும் சேவைகள் என இரண்டு பிரிவுகளிலும் தலா 6 துறைகளை இலக்காக நிா்ணயித்து ஏற்றுமதியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு ... மேலும் பார்க்க

கிராம அளவில் பெண்களுக்கான நீதிமன்றங்கள்: அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த மத்திய அரசு திட்டம்

குடும்ப வன்முறை, வரதட்சிணை கொடுமை என பெண்களுக்கு எதிரான பிரச்னைகளுக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணும் பெண்களுக்கான நீதிமன்றத்தை (நாரி அதாலத்) அனைத்து மாநிலங்களிலும் விரிவுப்படுத்த மத்திய அரசு திட்... மேலும் பார்க்க

மணிப்பூா்: ஆளுநருடன் பாஜக தலைவா்கள் சந்திப்பு

மணிப்பூரின் புதிய முதல்வா் யாா்? என்ற கேள்வி நீடித்துவரும் நிலையில், மாநில ஆளுநா் அஜய் குமாா் பல்லாவை ஆளும் பாஜக தலைவா்கள் செவ்வாய்க்கிழமை சந்தித்தனா். இன மோதலால் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு மாநிலமான ... மேலும் பார்க்க

ஊரகப் பகுதிகளில் மருத்துவ சேவைகள் கிடைப்பதில்லை என்பதில் உண்மையில்லை: ஜெ.பி.நட்டா

அரசால் ஊரகப் பகுதிகளில் மருத்துவ சேவைகளை வழங்க முடியவில்லை என்று கூறப்படுவதில் உண்மையில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா். இதுதொடா்பாக மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போ... மேலும் பார்க்க