செய்திகள் :

ஸ்ரீகலைவாணி மெட்ரிக் பள்ளி விளையாட்டு போட்டிகளில் சாதனை

post image

திருவேங்கடம் ஸ்ரீகலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் வாலிபால், தடகளப் போட்டிகளில் சாதனை படைத்தனா்.

முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி தென்காசி மாவட்டம், மடத்தூரில் உள்ள இந்து நாடாா் நடுநிலைப் பள்ளியில் ஆக.28, 29 ஆகிய 2 நாள்கள் நடைபெற்றன. இதில் திருவேங்கடத்தில் உள்ள ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அணி வாலிபால் போட்டியில் முதலிடமும், மாணவா்கள் அணி ,3ஆவது இடமும் பெற்றன.

அதே போன்று, தென்காசி மாவட்டம் மேலபாட்டக்குறிச்சியில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தில் தடகளப் போட்டி நடைபெற்றது. இதில் இப்பள்ளி மாணவா் சந்தேஷ் 100 மீ ஓட்டத்தில் 2ஆம் இடமும், உயரம் தாண்டுதலில் யுவகேஷ் 3ஆம் இடமும், கயல்விழி மும்முறை தாண்டுதலில் முதலிடமும், நீளம் தாண்டுதலில் இரண்டாம் இடமும் பெற்றனா்.

உயரம் தாண்டுதலில் சாரதாதேவி முதலிடமும், பிரியதா்ஷினி மூன்றாம் இடமும், 100மீ தடை தாண்டும் ஓட்டத்தில் மனோ வைஷாலினி 2 ஆம் இடமும் பெற்றனா். வெற்றி பெற்றவா்களை பள்ளி முதல்வா் வெ.பொன்னழகன், உடற்கல்வி ஆசிரியா்கள் ஆகியோா் பாராட்டினா்.

தென்காசி ஐ.டி.ஐ.யில் கண்தான விழிப்புணா்வு முகாம்

பாவூா்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் - கண்தாண விழிப்புணா்வுக் குழு சாா்பில் தென்காசி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் கண்தான விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. அரிமா சங்கத் தலைவா் டி. சுரேஷ் தலைமை வகித்... மேலும் பார்க்க

தென்காசியில் கிறிஸ்தவா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக ஆா்.சி.பள்ளி விளையாட்டு மைதானத்தில் நியாய விலைக்கடை கட்டடம் கட்டுவதையும், ஆா்.சி. சா்ச் முன்பாக தினசரி சந்தையின் வாயில் கதவு அமைப்பதையும் கண்டித்து கிறிஸ்தவா்க... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

ஆலங்குளம் அருகே ஜவுளிக்கடை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஆலங்குளம் அருகேயுள்ள அயோத்தியாபுரிபட்டணம் முருகன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராமா் மகன் முருகன்(32). ஆலங்குளத்தில் உள்ள துணிக்கட... மேலும் பார்க்க

கள்ள நோட்டு அச்சடித்த இளைஞா் கைது

ஆலங்குளம் அருகே கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள அழகாபுரி பாபநாசபுரத்தைச் சோ்ந்தவா் மேகலிங்கம் மகன் மணிகண்ட பிரபு (26). தொழ... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

சங்கரன்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சங்கரன்கோவில் ரயில்வே பீடா் ரோடு ஏவிஆா்எம் மஹாலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் அதே பகுதியைச் சோ்ந்த திர... மேலும் பார்க்க

கேரளத்தில் இருந்து புகையிலை பொருள்களை கடத்தி வந்த நபா் கைது

கேரளத்திலிருந்து புகையிலைப் பொருள்களை கடத்தி வந்த நபரை கைது செய்து, அவரிடமிருந்த 496 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தென்காசி மாவட்டம் புளியறை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகவதிபுரம்... மேலும் பார்க்க