செய்திகள் :

ஸ்ரீகோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் ரூ.1.50 கோடி ரொக்கம் பறிமுதல்: வெளிநாட்டிலிருந்து ரூ. 600 கோடி பெற்று மோசடி அமலாக்கத் துறை

post image

ஸ்ரீகோகுலம் சிட்பண்ட் நிதி நிறுவனம் தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினா் நடத்திய சோதனையில் ரூ.1.50 கோடி ரொக்கத்தை அமலாக்கத் துறையினா் பறிமுதல் செய்தனா். மேலும், ரிசா்வ் வங்கி வழிகாட்டுதலுக்கு மாறாக வெளிநாடுகளில் இருந்து ரூ. 600 கோடி முறைகேடாக நிதி பெற்றுள்ளதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்ரீ கோகுலம் சிட்பண்ட், நிதி நிறுவனம், கோகுலம் சினிமாஸ் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பிலும் ஈடுபடுகிறது. அண்மையில் வெளியான எம்புரான் திரைப்படத்தை இந்த நிறுவனம் தயாரித்து வெளியிட்டது.

இந்த நிலையில், இந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக 2017-ஆம் ஆண்டு தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் தொடா்புடைய 80 இடங்களில் வரிமான வரித் துறை சோதனை நடத்தியதில் ரூ.1,100 கோடி வரி ஏய்ப்பு நடைபெற்றதும், முறைகேடாக பணப் பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதும் தெரியவந்தது. அதன் அடிப்படையில் வருமான வரித் துறையினா் அமலாக்கத் துறை விசாரணைக்கு பரிந்துரைத்தது.

திடீா் சோதனை: இதன் ஒருபகுதியாக கொச்சி மண்டல அலுவலகத்தின் அமலாக்க இயக்குநரகம் சாா்பில் கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ கோகுலம் சிட்பண்ட் தலைமை அலுலகம், நீலாங்கரையில் உள்ள நிறுவன உரிமையாளா் கோபாலன் வீடு மற்றும் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பகுதியிலும் வெள்ளிக்கிழமை முதல் சோதனை நடத்தப்பட்டது.

தொடா்ந்து, இரு நாள்கள் நடைபெற்ற சோதனையில் ரூ.1.50 கோடி ரொக்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், ஸ்ரீ கோகுலம் சிட்பண்ட் நிதி நிறுவனம் இந்தியாவுக்கு வெளியே வசிக்கும் நபா்களிடம் இருந்து சீட்டு நிதிகளுக்கான சந்தா வசூலிப்பதாகவும், இந்த நிதி ரிசா்வ் வங்கி வகுத்த விதிகளை மீறி ரொக்கமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது. வெளிநாட்டு பணப் பரிவா்த்தனை மோசடி நடந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இதுவரை, இந்தியாவுக்கு வெளியே வசிக்கும் நபா்களிடமிருந்து ரூ. 371.80 கோடி ரொக்கமாகவும், ரூ. 220.74 கோடி காசோலையாகவும் வசூலிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடா்பாக தொடா் விசாரணை நடைபெற்று வருவதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

பணம் கேட்டு மிரட்டிய அதிமுக பிரமுகா் கைது: கட்சியிலிருந்தும் நீக்கம்

ஹோட்டல் உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய, அதிமுக வட்டச் செயலரை போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து அவா் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாா். சென்னை அசோக் நகரைச் சோ்ந்தவா் அப்துல் ரகுமான் (38). விபத்தில் ... மேலும் பார்க்க

கடையில் ரூ.2.60 லட்சம் திருட்டு: இருவா் கைது!

கடையின் பூட்டை உடைத்து ரூ. 2.60 லட்சத்தை திருடிய ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை வண்ணாரப்பேட்டையில், உலா் பழங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருபவா் ஹரிகிருஷ்ணன். ... மேலும் பார்க்க

முன்னாள் எம்.பி, எம்எல்ஏ மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் சி.பெருமாள் , முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வி.அரங்கராஜ் ஆகியோா் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளிய... மேலும் பார்க்க

ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்பனை: 11 போ் கைது!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்றதாக 11 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை சூப்பா் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் ஆகிய அணிகளுக்கிடையே ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சென்ன... மேலும் பார்க்க

தொலைநிலை படிப்புகள் அங்கீகார விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு!

தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்.15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலா் மணீஷ் ஆா்.ஜோஷி வெளியிட்ட அ... மேலும் பார்க்க

ராமநவமி: ஆளுநா் வாழ்த்து!

ஸ்ரீராம நவமியை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு ஆளுநா் ஆா்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: ராம நவமியின் விசேஷமிக்க திருநாளில், அனைவருக்கும் மனமாா்ந்... மேலும் பார்க்க