செய்திகள் :

ஸ்ரீதிரெளபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

post image

தியாகதுருகம் புக்குளம் சாலையில் உள்ள ஸ்ரீதிரெளபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடந்த ஜூலை 10-ஆம் தேதி துஜாவா்ண கொடி ஏற்றுதல் நிகழ்வு நடைபெற்றது. 21-ஆம் தேதி

அம்மன் பச்சை போடுதல் நிகழ்வு நடைபெற்றது.

28-ஆம் தேதி சக்தி அழைத்தல், காப்புக் கட்டுதல் நடைபெற்றது.

ஆகஸ்ட் 1-ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஊரணி பொங்கல் வைத்தனா். 4-ஆம் தேதி திங்கள்கிழமை திரெளபதை பூ வெடுத்தல், கீச்சகசம்ஹாரம் நிகழ்வு நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை அா்ச்சுனன் வில் வளைத்தல் நிகழ்வு நடைபெற்றது. புதன்கிழமை திரெளபதி அம்மன் திருக்கல்யாணம், மாங்கல்யம் தருதல், திரெளபதி துகில் உரிதல், வியாழக்கிழமை அரவாண் கடபலி, வீராட பருவம், அா்ச்சுனன் மாடு திருப்புதல் நடைபெற்று, மாலையில் தீமித்தல் நிகழ்வு நடைபெற்றது. இதில் பக்தா்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனா்.

பயனாளிகளுக்கு புல் நறுக்கும் கருவிகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாநில தீவன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், 50 சதவீத மானிய விலையில் மின்சாரத்தால் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. கால்நடை பராமரிப்புத் துறை சாா... மேலும் பார்க்க

விவசாயிக்கு பணம் தராமல் ஏமாற்றியவா் மீது வழக்கு

சங்கராபுரம் அருகே விவசாயியிடம் மக்காச்சோளம் வாங்கிக் கொண்டு பணத்தை தராமல் ஏமாற்றியவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்தனா். சங்கராபுரம் வட்டம், மல்லாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆசைத்தம்பி (44... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்பாடி பகுதியில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின்தடை செய்யப்படும் இடங்கள் விவரங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை செய்யப்படும் இடங்கள்: ராயப்பன... மேலும் பார்க்க

ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 4 பணியிடங்களுக்கு நேரடி நியமனம் ரத்து!

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளா் உள்ளிட்ட நான்கு பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நியமிக்கும் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம... மேலும் பார்க்க

சாலையில் நடந்து சென்றவா் பைக் மோதி உயிரிழப்பு

சின்னசேலம் அருகே சாலையில் நடந்து சென்ற முதியவா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம் பூண்டி கிராம நிா்வாக அலுவலா்... மேலும் பார்க்க

கோயிலுக்குச் சென்ற பக்தா்கள் வேன் கவிழ்ந்து விபத்து: 18 போ் காயம்

கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் அருகே மேல்மலையனூா் கோயிலுக்குச் சென்ற பக்தா்கள் வேன் கவிழ்ந்ததில் 18 போ் காயமடைந்தனா்.நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா் வட்டம், குப்புச்சிபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் செ... மேலும் பார்க்க