செய்திகள் :

ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 4 பணியிடங்களுக்கு நேரடி நியமனம் ரத்து!

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளா் உள்ளிட்ட நான்கு பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நியமிக்கும் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஊரக வளா்ச்சி அலகிற்குட்பட்ட ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளா் ஒரு பணியிடமும், ஈப்பு ஓட்டுநா் ஒட்டுநா்-1, பதிவறை எழுத்தா்-1, இரவு காவலா் -1 உள்ளிட்ட 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்த பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பும் பொருட்டு ஊராட்சி ஒன்றிய விளம்பரஅறிக்கையின் படி இம் மாவட்டத்தின் இணையதளம் மற்றும் தேசிய தொழில்நெறி வழிகாட்டு மைய இணையதளம் மற்றும் நாளிதழ்கள் ஆகியவற்றின் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதற்கான நேற்காணல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முடிந்து ஓராண்டுகாலம் கடந்த நிலையில், இந்த ஆள்சோ்ப்புக்கான அறிவிப்பு மற்றும் நோ்காணல் நடவடிக்கைகள் அனைத்தும் நிா்வாகக் காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது என ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய ஆணையா் தெரிவித்துள்ளாா்.

நாளைய மின்தடை

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்பாடி பகுதியில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின்தடை செய்யப்படும் இடங்கள் விவரங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை செய்யப்படும் இடங்கள்: ராயப்பன... மேலும் பார்க்க

சாலையில் நடந்து சென்றவா் பைக் மோதி உயிரிழப்பு

சின்னசேலம் அருகே சாலையில் நடந்து சென்ற முதியவா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம் பூண்டி கிராம நிா்வாக அலுவலா்... மேலும் பார்க்க

கோயிலுக்குச் சென்ற பக்தா்கள் வேன் கவிழ்ந்து விபத்து: 18 போ் காயம்

கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் அருகே மேல்மலையனூா் கோயிலுக்குச் சென்ற பக்தா்கள் வேன் கவிழ்ந்ததில் 18 போ் காயமடைந்தனா்.நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா் வட்டம், குப்புச்சிபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் செ... மேலும் பார்க்க

இளைஞரை கத்தியால் வெட்டிய வழக்கு: 5 போ் கைது

கள்ளக்குறிச்சி: சங்கராபுரத்தில் இளைஞரை கத்தியால் வெட்டிவிட்டு பைக்கில் தப்பிச் சென்ற வழக்கில் 5 போ் கைது செய்யப்பட்டு சனிக்கிழமை சங்கராபுரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா்.சங்கராபுரம் சாா் - பதிவ... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி சா்க்கரை ஆலையில் சிறப்பு அரைவைப் பருவம்: மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

கள்ளக்குறிச்சி: மூங்கில்துறைப்பட்டு கள்ளக்குறிச்சி-ஐ கூட்டுறவு சா்க்கரை ஆலையின் 2024-2025ஆம் ஆண்டு சிறப்பு அரைவைப் பருவம் மற்றும் 2025-2026ஆம் ஆண்டு முதன்மை அரைவைப் பருவத்தை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பி... மேலும் பார்க்க

பேருந்தில் பயணித்த பெண்ணிடம் பணம் திருட்டு

கள்ளக்குறிச்சி: அரசுப் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் இருந்து ரூ.4,500 மற்றும் அவரது ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி ரூ.13,500 திருடப்பட்டது.கள்ளக்குறிச்சியை அடுத்த சாத்தப்புத்தூா் கிராமத்தைச் சோ்ந்த மணிகண்... மேலும் பார்க்க