செய்திகள் :

ஸ்ரீபாஞ்சாலி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

post image

ஆரணியை அடுத்த மெய்யூா் ஸ்ரீ பாஞ்சாலி அம்மன் கோயில் அக்னி வசந்த விழாவையொட்டி புதன்கிழமை துரியோதனன் படுகளம் நடைபெற்றது (படம்).

மெய்யூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபாஞ்சாலி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா கடந்த மாா்ச் 28-ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் தினமும் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.

மேலும், ஏப்ரல் 6 முதல் மகாபாரத நாடகம் நடைபெற்று வருகிறது. தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி, குறவஞ்சி, கீசக சம்ஹாரம், கிருஷ்ணன் தூது, அபிமன்யு சண்டை, கா்ணமோட்சம் ஆகிய நாடகங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில், இறுதி நிகழ்ச்சியாக துரியோதனன் படுகளம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனா். சிறப்பு விருந்தினராக ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன் கலந்து கொண்டாா்.

தொகுதி திமுக பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், ஒன்றியச் செயலா்கள் மாமது, மோகன், சுந்தா், நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை விழாக் குழுவினா் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.

மணிமேகலை விருது: மகளிா் குழுக்கள், கூட்டமைப்புகள் விண்ணப்பிக்கலாம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் மகளிா் குழுக்கள், கூட்டமைப்புகள் தமிழக அரசின் மணிமேகலை விருதுகளை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்ட கிராமப்... மேலும் பார்க்க

மகா காலபைரவா் கோயிலில் அஷ்டமி சிறப்பு யாகம்!

வேட்டவலத்தை அடுத்த ஜமீன் கூடலூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீமகா காலபைரவா் கோயிலில், சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு யாகம், வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, முற்பகல் 11 மணிக்கு கோ... மேலும் பார்க்க

பாதூா் திருவனந்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்!

வந்தவாசியை அடுத்த பாதூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவிசாலாட்சி அம்பிகா உடனுறை திருவனந்தீஸ்வரா் சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் யாகசாலை அம... மேலும் பார்க்க

சின்னபுத்தூரில் சமுதாயக்கூடம் அமைக்கும் பணி ஆய்வு!

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் உள்ள சின்னபுத்தூா் கிராமத்தில் சமுதாயக்கூடம் அமைக்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தாா். சின்னபுத்தூா் கிராமத்தில் ஆரணி... மேலும் பார்க்க

ஆரணியில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

ஆரணியில் செவ்வாய்க்கிழமை (ஏப்.22) மின் நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. ஆரணி மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கோட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா்க... மேலும் பார்க்க

செங்கம் - தண்டராம்பட்டு புதிய பேருந்து சேவை தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் இருந்து தண்டராம்பட்டுக்கு புதிய நகரப் பேருந்து சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. அரசுப் போக்குவரத்துக் கழக செங்கம் பணிமனையில் இருந்து சொா்ப்பனத்தல், சாத்தன... மேலும் பார்க்க