செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூர்: ``லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கும்..'' - CPIM பேனரால் பரபரப்பு

post image

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி கிராமம் நாகபாளையத்தில், குருசாமி என்பவரின் குடும்பத்துக்கு பாத்தியப்பட்ட 2.50 சென்ட் இடம் அப்பகுதியில் உள்ளது. அந்த நிலத்துக்கான பட்டா குருசாமியின் தந்தை சண்முகத்தேவர் மற்றும் சித்தப்பா தங்கவேல்தேவர் ஆகியோர் பெயரில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், இந்த இடத்தை கடந்த 2022-ம் ஆண்டு சந்திரசேகர் என்பவர் தனது தந்தை முத்துச்சாமி தேவர் மற்றும் பெரியப்பா காளிமுத்து தேவர் ஆகியோர் பெயரில் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்து முறைகேடாக பட்டா பதிவு பெற்றதாக கூறப்படுகிறது.

பேனர்

இந்த மோசடியை அறிந்த குருசாமி, போலியாக பதிவுசெய்யப்பட்ட பட்டா மாறுதலை ரத்து செய்யக்கோரி, கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என அனைத்து இடங்களிலும் மனு கொடுத்துள்ளார்.

ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், மல்லி கிராம நிர்வாக அலுவலர், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் ஆகியோருக்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன பேனர்கள் வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஒன்றிய செயலாளர் சசிக்குமார் நம்மிடம் பேசுகையில், "பேலியான‌ பட்டா மாறுதலை ரத்துசெய்யக்கேட்டு மனு கொடுத்தவரை கடந்த இரண்டு வருடங்களாக அதிகாரிகள் அலைக்கழிப்பு செய்துள்ளனர்.

அலுவலகம் முன்பு..

ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணம் இருந்தால் மட்டுமே எந்த ஒரு வேலையும் நடைபெறுகிறது. இந்தப்போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது. லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கும் என்ற நிலை நீடிப்பது கேவலமானது. ஆகவே, மாவட்ட மனு மீது நியாயமாக நடவடிக்கை எடுக்கத்தவறிய அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பொதுமக்களை திரட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்" என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

மனு கொடுக்க வந்த மக்களை ஒருமையில் பேசி, அவமரியாதையாக நடத்திய காவலர் - ஆட்சியர், இதையும் கவனிக்கலாம்!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமையான நேற்று மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகள் மற்றும் ப... மேலும் பார்க்க

`ஆளுநர் தலைமையில் துணை வேந்தர்கள் மாநாடு; ஜெகதீப் தன்கர் பங்கேற்பு' - மீண்டும் வெடிக்கும் சர்ச்சை

தமிழ்நாட்டில் சென்னை ராஜ்பவனுக்கு அடுத்தபடியாக ஆளுநருக்கான அதிகாரப்பூர்வ மாளிகையை நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அமைத்துள்ளனர். ஆளுநர்களின் ஒய்வு மட்டுமின்றி அலுவலக பணிகள், முக்கிய ஆலோசனை கூட்டங்களும் ஊட்... மேலும் பார்க்க

மதிமுக: "வைகோவின் முகம் பதித்த மோதிரம் என் அடையாளம்" - அனுபவம் பகிரும் மல்லை சத்யா

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்தெழுந்த நாளை ஈஸ்டர் திருநாளாக மக்கள் கொண்டாடி வருகிறார்கள். ம.தி.மு.க துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா ஈஸ்டர் திருநாளுக்கு வாழ்த்து தெரிவித்து, வாட்டிகன் நகர... மேலும் பார்க்க

சென்னை: முதல்முறையாக ஏசி வசதியுடன் புறநகர் ரயில் சேவை - இன்று முதல் தொடக்கம்; கட்டணம் எவ்வளவு?

சென்னையில் முதல்முறையாக, சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரையில் ஏசி வசதியுடன் கூடிய புறநகர் மின்சார ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.கடந்த மார்ச் மாதம் இதற்கான சோதனை ஓட்டம்... மேலும் பார்க்க

NTK: `சாட்டை சேனலுக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை’ - சீமானின் `திடீர்’ கண்டிப்பின் பின்னணி!

நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர் துரைமுருகன் நடத்திவரும் `சாட்டை` யூட்யூப் சேனலுக்கும் கட்சிக்கும் தொடர்பில்லை என அறிவித்திருக்கிறார் சீமான். முன்னணி நிர்வாகிகளுக்கு இடையேயான பனிப்போர்தா... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: பூங்காவில் மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம்; கவுன்சிலரின் கணவர் மீது புகார்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை நகராட்சியின் 4வது வார்டு பகுதியாகிய பாபு நகரில் உள்ள பூங்கா, கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு மரங்களை வளர்த்து சிறுகாடாக மாற்றப்பட்டிருந்தது. இதில் நீர் மருது, புரசை, தே... மேலும் பார்க்க