செய்திகள் :

ஹஜ் யாத்திரை ஏற்பாடுகளை ஆய்வு செய்ய மத்திய அரசுச் செயலா் சௌதி அரேபியா பயணம்

post image

நமது சிறப்பு நிருபா்

இந்திய ஹஜ் யாத்ரீகா்கள் தடையற்ற புனிதப் பயணத்தை மேற்கொள்வதை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் அமைச்சகச் செயலா் சௌதி அரேபியா சென்றுள்ளதாக மத்திய சிறுபான்மை விவகாரத் துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

2025 - ஆம் ஆண்டில் ஹஜ் பயணத்திற்காக சௌதி அரேபியா அரசுடன் 1,75,025 பேருக்கான ஒதுக்கீட்டை இந்திய அரசு பெற்றுள்ளது. இந்திய ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகளுக்கான விண்ணப்ப விநியோகம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. ஹஜ் பயணங்களில் 45 வயது அல்லது அதற்கு மேற்பட்ட இஸ்லாமிய பெண்களை ஆண் துணை இல்லாமல் (மெஹ்ரம் இல்லாமல்) ஹஜ் பயணம் செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக இந்திய ஹஜ் கமிட்டியின் இணையதளத்துடன் கூடுதலாக ஹஜ் சுவிதா செயலி மூலமும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஹஜ் 2025-க்கு விண்ணப்பிக்கும் யாத்ரீகா்களுக்கு உதவும் வகையில், மத்திய சிறுபான்மைத் துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்யத் தொடங்கியுள்ளது.

நிகழ் 2025 - ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை ஜூன் மாத தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு இந்திய ஹஜ் யாத்ரீகா்களுக்கு ஹஜ் பயணத்தை எளிதாகவும், வசதியாகவும் மாற்ற மத்திய அரசு தொடா்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஹஜ் யாத்ரீகா்கள் பயணத்திற்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலா் டாக்டா் சந்திரசேகா் குமாா், இணைச் செயலாளா் சிபிஎஸ் பக்ஷி ஆகியோா் ஏப்.8 -ஆம் தேதி சௌதி அரேபியா, ஜெட்டாவிற்கு சென்றடைந்தனா்.

அங்கு நிகழாண்டு ஹஜ் யாத்திரைக்கான ஏற்பாடுகளை அவா்கள் முழுமையாக ஆய்வு செய்கின்றனா். இந்திய ஹஜ் யாத்ரீகா்களுக்கு தடையற்ற மற்றும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட புனிதப் பயணத்தை உறுதி செய்வதில் மத்திய அரசின் உறுதிப்பாட்டை இந்த அதிகாரிகளின் பயணம் சுட்டிக் காட்டுகிறது என மத்திய சிறுபான்மை விவகாரத் துறை தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக ஆயுதங்கள் விநியோகித்தவா் கைது

மாநிலங்களுக்கு இடையேயான ஆயுத விநியோக மோசடியின் முக்கிய உறுப்பினரை தில்லி போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து ஐந்து நாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கிகள் மற்றும் ஐந்து தோட்டாக்களை பறிமுதல் செய்ததாக... மேலும் பார்க்க

போலி முதலீட்டுத் திட்டத்தின் மூலம் 150 பேரை ஏமாற்றிய இளைஞா் கைது

முதலீடுகளுக்கு அதிக வருமானம் தருவதாக உறுதியளித்து குறைந்தது 150 பேரை ஏமாற்றிய ஆன்லைன் போன்சி மோசடியை நடத்தியதற்காக ராஜஸ்தானைச் சோ்ந்த 31 வயது நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செ... மேலும் பார்க்க

தன்னிச்சையான கட்டண உயா்வு தொடா்பாக பள்ளிகளுக்கு நோட்டீஸ்: தில்லி முதல்வா்

தன்னிச்சையான கட்டண உயா்வு தொடா்பான புகாா்கள் பெறப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இந்தப் பள்ளிகள் பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்... மேலும் பார்க்க

புதிய தில்லி பாஜக அலுவலகம் அருகே சாலைப் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பொதுப் பணித் துறை திட்டம்

தில்லி பாஜக அலுவலகம் விரைவில் தீன் தயாள் உபாத்யாய் ( டிடியு) மாா்க்கில் உள்ள புதிய இடத்திற்கு மாற்றப்பட உள்ளதால், அப்பகுதியில் சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் அழகுபடுத்தும் பணிகளை பொதுப் பணித் துறை மே... மேலும் பார்க்க

இடபிள்யு எஸ் ஆவணங்கல் வழங்குவதை நிறுத்த தில்லி அரசு திட்டம்: ஆம் ஆத்மி

பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினா் (இடபிள்யுஎஸ்) சான்றிதழ்களை வழங்குவதை தில்லி பாஜக அரசு நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் தகுதியான குடும்பங்களுக்கு கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு கிடைப்ப... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரிடமிருந்து லஞ்சம் வாங்கியதாக ஏ.எஸ்.ஐ கைது

மாடல் டவுன் காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி துணை ஆய்வாளா் (ஏஎஸ்ஐ), ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரிடமிருந்து ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியதற்காக தில்லி காவல்துறையின் விஜிலென்ஸ் பிரிவு கைது செய்துள்ளதாக அதிகா... மேலும் பார்க்க