செய்திகள் :

ஹஜ் யாத்திரை: தனியார் நிறுவனங்களுக்கு 10,000 இடங்கள் ஒதுக்க சவூதி ஒப்புதல்- மத்திய அரசு

post image

நமது சிறப்பு நிருபர்

நிகழாண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு தனியார் சுற்றுலா நிறுவனங்களுக்கு 10,000 இடங்கள்அளிக்க சவூதி அரேபியா அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தனியார் சுற்றுலா நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட 52,507 இடங்கள் ரத்தாகி உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளநிலையில், இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

தனியார் சுற்றுலா நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் குறைந்துள்ளதாகவும் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோர் மத்திய அரசை வலியுறுத்தினர்.

இந்நிலையில், தனியார் நிறுவனங்கள் தேவையான ஒப்பந்தங்களைப் பூர்த்தி செய்யத் தவறியதே

இடங்கள் குறைந்ததற்கு காரணம் என்றும் 10,000 யாத்ரிகர்களுக்கு அனுமதி வழங்க சவூதி அரேபியா அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது என்றும் மத்திய சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. அதன் விவரம்: ஆண்டுதோறும் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் 1,36,020 ஆக இருந்த ஹஜ் பயணிகளின் ஒதுக்கீடு, 2025 ஆண்டில் 1,75,025-ஆக அதிகரிக்கப்பட்டது.

விமானப் பயணம், மினா முகாம்கள், தங்குமிடம் மற்றும் கூடுதல் சேவைகள் உள்பட தேவையான அனைத்து ஏற்பாடுகளும் சவூதி அரேபியா அரசு கூறிய விதிமுறைகளுக்கு ஏற்ப காலக்கெடுவுக்குள் முடிக்கப்பட்டு ஹஜ் கமிட்டிக்கு நிகழாண்டில் 1,22,518 இடங்கள் ஒதுக்கப்பட்டன.

மீதமுள்ள 52,507 இடங்கள் தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர் நிறுவனங்களுக்கு. சவூதி அரேபியா அரசு வழிகாட்டுதல்களில் மாற்றங்களை செய்தால், 800-க்கும் மேற்பட்ட தனியார் சுற்றுலா ஆபரேட்டர்கள் 26 ஒருங்கிணைந்த ஹஜ் பயண ஏற்பாட்டு நிறுவனங்களாக (சிஹெச்ஜிஓ) ஒருங்கிணைக்கப்பட்டன.

சவூதி அரேபியாவால் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் மினா முகாம்கள், தங்குமிடம், யாத்ரிகர்களின் போக்குவரத்து ஆகியவை தொடர்புடைய கட்டாய ஒப்பந்தங்களை சிஹெச்ஜிஓக்கள் பூர்த்தி செய்யத் தவறிவிட்டன.

இருப்பினும், இந்த விஷயத்தில் மத்திய அமைச்சர்கள் நிலையில் சம்பந்தப்பட்ட சவூதி அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது. மினாவில் கடுமையான கோடை வெப்ப சூழ்நிலையில் யாத்ரிகர்களின் பாதுகாப்பு குறித்த கவலையை இந்தியாவோடு சவூதி பகிர்ந்து கொண்டது.

இந்நிலையில், மத்திய அரசின் தலையீட்டின் காரணமாக, மினாவில் தற்போது கிடைக்கும் இடத்தின் அடிப்படையில் 10,000 யாத்ரீகர்களுக்கு அனுமதி அளிப்பதாக சவூதி ஹஜ் அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது.

இது தொடர்பான விண்ணப்பப் பணிகளை முடிக்க ஹஜ் இணையதளத்தை மீண்டும் திறக்கவும் சவூதி ஹஜ் அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது. இந்தப் பணிகளை விரைவாக மேற்கொள்ள சிஹெச்ஜிஓ- களுக்கு மத்திய அரசு கேட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அகிலேஷ் யாதவுக்கு மீண்டும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பு கோரி அமித் ஷாவுக்கு கடிதம்!

சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு மீண்டும் தேசிய பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பு கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு சமாஜவாதி கட்சி கடிதம் எழுதியுள்ளது. கடிதத்தில், "முன்னாள் முதல்வ... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புது தில்லி: வக்ஃப் சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் பி.ஆர். கவாய்!

உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாயை நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பரிந்துரைத்துள்ளார்.முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனுக்குப் பிறகு தலைமை நீதிபத... மேலும் பார்க்க

மோடி பாணியில் சந்திரபாபு: டிசிஎஸ் நிறுவனத்துக்கு 99 பைசாவுக்கு 21 ஏக்கர் நிலம்! செம ஐடியா!!

துறைமுக நகரமாக இருக்கும் விசாகப்பட்டினத்தை, தகவல்தொழில்நுட்ப நகரமாக மாற்றுவதற்கான முதற்கட்டமாக, டிசிஎஸ் நிறுவனத்துக்கு 21.16 ஏக்கர் நிலத்தை அடையாளத் தொகையாக வெறும் 99 பைசாவுக்குக் கொடுத்திருக்கிறது ஆந... மேலும் பார்க்க

சோனியா, ராகுல் பிணையில் வந்தவர்கள் என்பதை நினைவில் கொள்ளவும்: பாஜக

காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் பிணையில் வெளிவந்தவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.நேஷனல் ஹெரால்ட் வழக்கி... மேலும் பார்க்க

2வது நாளாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ராபர்ட் வதேரா ஆஜர்!

ஹரியாணா நில ஒப்பந்தம் தொடர்பான பணமோசடி வழக்கில் விசாரணைக்காக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார். மேலும் பார்க்க