செய்திகள் :

ஹரியாணாவில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,100 உதவித்தொகை!

post image

ஹரியாணாவில் தகுதியான பெண்களுக்கு செப். 25 முதல் மாதந்தோறும் ரூ. 2100 உதவித்தொகை வழங்கப்படும் திட்டத்தை செயல்படுத்தப்படும் என்று முதல்வர் நயாப் சிங் சைனி அறிவித்தார்.

மாநிலத்தில் ஆளும் பாஜக தனது முக்கிய தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியது. செப். 25 முதல் லடோ லட்சுமி யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக முதல்வர் நயாப் சிங் சைனி அறிவித்தார்.

தீன் தயாள் லடோ லட்சுமி யோஜனா திட்டத்தைச் செயல்படுத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் தீன் தயாள் உபாத்யாயாவின் பிறந்தநாளான செப்டம்பர் 25 முதல் செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள அனைத்து பெண்களும் மாதந்தோறும் ரூ.2,100 நிதி உதவி பெறுவார்கள். செப்டம்பர் 25 முதல் 23 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பலனடைவார்கள்.

திருமணமானவர்கள், திருமணமாகாதவர்களும் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறுவார்கள். முதல்கட்டமாக ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்க்க முடிவு செய்துள்ளோம். வரும்காலங்களில் இந்த திட்டத்தில் வருமானப் பிரிவுகளைச் சேர்த்து விரிவுபடுத்தப்படும்.

மேலும் திருமணமாகாத பெண் அல்லது திருமணமானவராக இருந்தால் அவரது கணவர் 15 ஆண்டுகள் ஹரியாணாவில் வசிக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் பெண்களின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை.

ஒரு குடும்பத்தில் மூன்று பெண்கள் தகுதியுடையவர்களாக இருந்தால், மூவரும் இந்தத் திட்டத்தின் பயனைப் பெறுவார்கள் என்று அவர் கூறினார்.

Ruling BJP on Thursday fulfilled its major poll promise, with Chief Minister Nayab Singh Saini announcing the rollout of the 'Lado Lakshmi Yojana' from September 25 under which eligible women will be given Rs 2,100 monthly assistance.

தெலங்கானா வெள்ளம்: 5 பேர் பலி.. 3 பேர் மாயம்! மீட்புப் பணிகள் தீவிரம்!

தெலங்கானா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் மற்றும் வெள்ளத்தினால், 5 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், பருவமழையின் தாக்கம் அதிகரித்து பெய்த கனமழையால் முக்கிய ந... மேலும் பார்க்க

பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரும் ஏழைகள்: ராகுல்!

பிகார் மாநிலத்தில், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் மக்கள் அனைவரும் ஏழைகள் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். பிகாரில், நிகழாண்டு (2025) சட்டப்பேரவைத் தேர்... மேலும் பார்க்க

வாக்காளர் அதிகார யாத்திரையில் மோடி குறித்து அவதூறு! பாஜக கண்டனம்

பிகார் மாநிலம் தர்பங்காவில் நடைபெற்ற வாக்காளர் அதிகார யாத்திரைக் கூட்டத்தில், அடையாளம் தெரியாத நபர், பிரதமர் மோடி குறித்து அவதூறான கருத்துகளைக் கூறிய விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசுபொருளாகியிர... மேலும் பார்க்க

பாதுகாப்பின்மை குறித்த அச்சத்தில் 40% கிராமப் பகுதி பெண்கள் - ஆய்வு

பெண்களின் பாதுகாப்புக் குறித்த நாரி 2025 என்ற ஆய்வு முடிவு, புகார் அளிக்க முடியாத, எண்ணற்ற துன்புறுத்தல்களுக்கு பெண்கள் ஆளாவதாகவும், அது பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கையை விட அதிகம் என்றும் தெரிவித்து... மேலும் பார்க்க

ஜம்முவில் ஆக. 30 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

தொடர் கனமழை காரணமாக ஆக.30 வரை ஜம்முவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்முவில் கடந்த சில நாள்களாக கனமழை தொடர்ந்து வருகின்றது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளத... மேலும் பார்க்க

பிகாருக்குள் நுழைந்த பயங்கரவாதிகள்? உச்சகட்ட கண்காணிப்பில் காவல்துறை

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மூன்று பேர் பிகாருக்குள் நுழைந்திருப்பதாக புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல் வரப்பெற்றதையடுத்து, உச்சகட்ட கண்காணிப்புப் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.தேரதல் நடைபெறவிருக்கும் நில... மேலும் பார்க்க