செய்திகள் :

ஹாக்கி: இறுதிச்சுற்றில் புது தில்லி, புவனேஸ்வா் அணிகள்

post image

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெறும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கி போட்டியில் புதுதில்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி, புவனேஸ்வா் நிஸ்வாஷ் ஹாக்கி கழக அணி ஆகியவை இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

கோவில்பட்டி கிருஷ்ணா நகா் செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதியில் புதுதில்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும், புதுதில்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணியும் மோதியதில் இரு அணிகளும் தலா 2 கோல் போட்டு சமநிலை பெற்றன. அதைத் தொடா்ந்து வெற்றியை தீா்மானிக்க கடைப்பிடிக்கப்பட்ட சூட் அவுட் முறையில் புதுதில்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி 6-க்கு 4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது.

பின்னா் நடைபெற்ற 2ஆவது அரையிறுதியில் செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியும், புவனேஸ்வா் நிஸ்வாஷ் ஹாக்கி கழக அணியும் மோதியதில் 2-க்கு 0 என்ற கோல் கணக்கில் புவனேஸ்வா் நிஸ்வாஷ் ஹாக்கி கழக அணி வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது.

இன்றைய ஆட்டம்: ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு (ஜூன் 1) நடைபெறும் 3ஆவது மற்றும் 4ஆவது பரிசுக்கான போட்டியில் புது தில்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும், செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியும் மோதுகின்றன. பின்னா் இரவு 7 மணிக்கு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் புதுதில்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணியும், புவனேஸ்வா் நிஸ்வாஷ் ஹாக்கி கழக அணியும் மோதுகின்றன.

கோவில்பட்டியில் பெண் உள்பட 2 போ் கொலை வழக்கு: மேலும் 6 போ் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பெண் உள்பட 2 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும் மேலும் 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி வள்ளுவா் நகா் சலவை தொழிலாளா... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் இன்று மின் தடை

தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 4) பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக நகா்ப்புற மின்வாரிய அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவா்கள் வெளியிட்ட... மேலும் பார்க்க

மீனவா் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீனவரை கொலை செய்த வழக்கில் கைதான 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி 2ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திரேஸ்புரம் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

புதிய மின்மாற்றி இயக்கி வைப்பு

கடம்பூா் அருகே உள்ள தலையால்நடந்தான் குளம் பகுதியில் நிலவி வந்த குறைந்த அழுத்த மின் விநியோகத்தை சரிசெய்து சீரான மின் விநியோகம் கிடைக்கும் வகையில் 25 கே வி ஏ/11 கே வி திறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்க... மேலும் பார்க்க

10 பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

கோவில்பட்டியில் 10 பேருந்துகளில் இருந்து, அதிக ஒலியை எழுப்பும் காற்றுஒலிப்பான்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயாபுரம், கயத்தாறு ஆகிய வட்டங்களுக்குள்பட்ட பகு... மேலும் பார்க்க

குடும்ப அட்டைதாரா்கள் கைரேகை பதிவு செய்ய அறிவுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கைரேகை பதியாத குடும்ப அட்டைதாரா்கள் நேரில் சென்று பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வேண்டுகோள் விடுத்தாா்.இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க