செய்திகள் :

ஹார்வர்ட் பல்கலைக் கழகத்துக்கு ட்ரம்ப் அதிரடி உத்தரவு; பெல்ஜிய இளவரசியின் படிப்பு என்னவாகும்?

post image

அமெரிக்காவின் பிரபலமான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டில் இருந்து மாணவர்கள் சேர்வதற்கு ட்ரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் காஸா போர் உள்ளிட்ட விவாகரங்களை கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்கள் நடத்தியதை அடுத்து ட்ரம்ப் இதுபோன்ற அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

389 ஆண்டுகள் பழமையான இந்த பல்கலைக்கழகம் உலகின் பிரபலமான பல்கலைக்கழகமாக கருதப்படுகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்வதற்கு டிரம்ப் நிர்வாகம் தடை விதித்ததை பல்கலைக்கழகம் ஏற்க மறுத்தது.

இதனால் பல்கலைக்கழகத்திற்கு வரவேண்டிய 2.2 பில்லியன் டாலர் நிதியும், 60 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தையும் டிரம்ப் நிறுத்தினார்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டில் இருந்து ஆண்டுக்கு சுமார் 800 பேர் சேர்ந்து பயின்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வருங்கால ராணியான 23 வயதான இளவரசி எலிசபெத் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தனது முதலாம் ஆண்டு படிப்பை முடித்துள்ளார்.

இதற்கிடையில் ட்ரம்ப் நிர்வாகம் அங்கு படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்தது, இலவரசியின் தொடர்ச்சியான படிப்பை பாதிக்க கூடும் என்று பெல்ஜிய அரசு அரண்மனையின் செய்தி தொடர்பாளர் லோட் வான்டோர்ன் கூறியிருக்கிறார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

செய்தி தொடர்பாளர் லோட் வான்டோர்ன் இது குறித்து கூறுகையில் "இளவரசி எலிசபெத் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கையை பயின்று வருகிறார் இது இரண்டு வருடம் முதுகலை படிப்பாகும். தற்போது இருக்கும் நிலை குறித்து நாங்கள் ஆராய்ந்து வருகிறோம், வரும் நாள்களில் இன்னும் நிறைய நடக்கலாம். ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவின் தாக்கம், வரும் நாள்களில் தான் தெளிவாக தெரியும்” என்று அவர் கூறியிருந்தார்.

இளவரசி எலிசபெத், பெல்ஜிய அரியணையின் வாரிசான மன்னர் பிலிப் மற்றும் ராணி மதில்டே ஆகியோருக்கு பிறந்த நான்கு குழந்தைகளில் மூத்தவர் ஆவார். ஹார்வர்டில் சேர்வதற்கு முன்பு இவர் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் அரசியல் பட்டம் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Niti Aayog: ``மகனுக்காக டெல்லியில் தவம் இருக்கிறார்..'' - ஸ்டாலின் குறித்து பேசிய ஜெயக்குமார்

டெல்லியில் இன்று (மே 24) 10 -வது நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம்,... மேலும் பார்க்க

`கோவை 10 தொகுதிகளும் காலி' - ஷாக் கொடுத்த சர்வே.. - உடன்பிறப்புகளுக்கு செந்தில் பாலாஜி வார்னிங்!

திமுகவுக்கு அதிர்ச்சி ரிப்போர்ட்அமைச்சர் பதவியை பறிகொடுத்தாலும், செந்தில் பாலாஜிக்கு மேற்கு மண்டல பொறுப்பாளர் என்கிற பவர்ஃபுல்லான பதவியை திமுக தலைமை கொடுத்துள்ளது. ஏற்கெனவே கோவை, கரூர் மாவட்டங்கள் அவர... மேலும் பார்க்க

Niti Aayog: 3 ஆண்டுகள் புறக்கணித்த ஸ்டாலின், இம்முறை பங்கேற்றது ஏன்? - சீமான் கேள்வி

சென்னையில் இன்று (மே 24) சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.“சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரை நாம் தமிழர் கட்சி எப்போதோ தேர்தல் பணிகளைத் தொடங்கி செய்து வருகிறது. கிட்டத்தட்ட 100 வேட்பாளர்... மேலும் பார்க்க

Niti Aayog: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்டாலின் பங்கேற்பு; மம்தா, சித்தராமையா புறக்கணிப்பு..

டெல்லியில் இன்று( மே 24) 10 -வது நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்று வருகிறது. பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் இந்தநிதி ஆயோக் கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேற... மேலும் பார்க்க

``திமுக ஆட்சியில் இதுவரை 18,200 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு..'' - ஆர்.பி.உதயகுமார் காட்டம்

தஞ்சாவூரில் அதிமுக ஆர்ப்பாட்டம்தஞ்சாவூரில் அதிமுக சார்பில், தமிழகத்தில் நடைபெறும் பாலியல் சம்பவங்களை கண்டித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஆர... மேலும் பார்க்க

`ஹெல்மெட் அணியாமல், அனுமதி பெறாமல் பைக் பேரணி' - காங். எம்எல்ஏ மீது போலீசார் வழக்குப்பதிவு, அபராதம்

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டு 34 ஆண்டுகள் கடந்த நிலையில், அவரது நினைவு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட பளுகலில் இருந்து குழித்துறை... மேலும் பார்க்க