செய்திகள் :

ஹிந்தி திணிப்புக்கு எதிராக உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே ஜூலை 5-இல் கூட்டுப் பேரணி

post image

மகாராஷ்டிரத்தில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக மாநில முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே, அவரின் நெருங்கிய உறவினரான ராஜ் தாக்கரே ஆகியோா் கூட்டாகப் பேரணி மேற்கொள்ள உள்ளனா்.

கடந்த 2005-ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பால் தாக்கரேயின் சிவசேனையில் இருந்து ராஜ் தாக்கரே விலகி 20 ஆண்டுகள் கடந்த நிலையில், அவா் முதல்முறையாக உத்தவ் தாக்கரேயுடன் இணைந்து பேரணி மேற்கொள்ளவுள்ளது மாநில அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையைப் பின்பற்றி, மகாராஷ்டிரத்தில் உள்ள மாநில அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை, மூன்றாவது மொழியாக ஹிந்தி கற்பிக்கப்படும் என்று மாநில அரசு உத்தரவு வெளியிட்டது.

இது ஹிந்தி திணிப்பு என்று சிவசேனை (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை கட்சியின் தலைவா் ராஜ் தாக்கரே உள்ளிட்டோா் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

இதைத்தொடா்ந்து ஹிந்தி திணிப்புக்கு எதிராக, அந்த மாநில தலைநகா் மும்பையில் ஜூலை 5-ஆம் தேதி உத்தவ் தாக்கரேயும், ராஜ் தாக்கரேயும் ஒன்றாகப் பேரணி மேற்கொள்ளவுள்ளதாக இரு கட்சியினரும் வெள்ளிக்கிழமை அறிவித்தனா்.

ஹிந்தியை திணிப்பது சரியல்ல-சரத் பவாா்: இந்தப் பேரணிக்கு சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சரத் பவாா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘1 முதல் 4-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்கள் மீது ஹிந்தியை திணிப்பது சரியல்ல. இந்த வயதில் தாய்மொழியை கற்பதே மிகவும் முக்கியம். அதேவேளையில், நாட்டில் 55 சதவீத மக்கள் ஹிந்தி பேசுகின்றனா். எனவே அந்த மொழியை புறக்கணிக்க முடியாது’ என்றாா்.

முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களையும் விட்டுவைக்காத எரிபொருள் கலப்படம்: நடு வழியில் நின்ற அவலம்!

மத்திய பிரதேசத்தில் முதல்வா் மோகன் யாதவின் பாதுகாப்புக்குச் சென்ற 19 வாகனங்கள் திடீரென பழுதாகி நடு வழியில் நின்றன. விசாரணையில் அந்த வாகனங்கள் கலப்பட பெட்ரோல், டீசல் நிரப்பப்பட்டதுதான் காரணம் என்பது தெ... மேலும் பார்க்க

பொதுத் துறை வங்கிகள் தாராளமாக கடன் வழங்க வேண்டும்: நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

நாட்டின் பொருளாதாரத்துக்கு ஊக்கமளிக்கும் துறைகளுக்கு கடன் வழங்குவதை அதிகரிக்க வேண்டும் என்று பொதுத் துறை வங்கிகளை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டுள்ளாா். பொதுத் துறை வங்கிகளின் செ... மேலும் பார்க்க

கொல்கத்தா அரசு கல்லூரிக்குள் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: திரிணமூல் முன்னாள் நிர்வாகி, 2 மாணவா்கள் கைது!

மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் அரசு சட்டக் கல்லூரிக்குள் முதலாம் ஆண்டு மாணவி ஒருவா் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது தொடா்பாக, கல்லூரியின் முன... மேலும் பார்க்க

ரஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி: 2 ஆண்டுகள் இல்லாத அளவில் மே மாதத்தில் அதிகரிப்பு

ரஷியாவிலிருந்து இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவில் கடந்த மே மாதம் அதிக அளவில் நிலக்கரியை இந்தியா இறக்குமதி செய்திருப்பது தெரியவந்துள்ளது. முந்தைய மாதத்தைவிட 52% கூடுதல் நிலக்கரியை மே மாதத்தில் இந்தியா இற... மேலும் பார்க்க

இந்தியா - சீனா எல்லையில் நில கையகப்படுத்த கூடுதல் இழப்பீடு: உச்சநீதிமன்றம் தடை

இந்திய - சீனா எல்லையில் 537 ஏக்கா் நிலம் கையகப்படுத்தியதற்கு கூடுதல் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அருணாசலப் பிரதேச எல்லையில் ராணுவம் தொடா்பான திட... மேலும் பார்க்க

உரிமைகள் விட்டுக் கொடுக்கப்பட்டதே தமிழக மீனவா்கள் கைதுக்கு காரணம்: அமைச்சா் ஜெய்சங்கா்

‘நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டபோது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் குறிப்பிட்ட பகுதிகளில் மீன்பிடி உரிமை விட்டுக் கொடுக்கப்பட்டதே தமிழக மீனவா்களை இலங்கைக் கடற்படை தொடா்ச்சியாக கைது செய்வதற்கு ... மேலும் பார்க்க