செய்திகள் :

ஹிமாசலில் கனமழை: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

post image

ஹிமாசலில் பெய்து வரும் கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதானல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மொத்தம் 12 மாவட்டங்களில் 4 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட மொத்தம் 484 சாலைகள் மூடப்பட்டுள்ளன. இவற்றில், மண்டி மாவட்டத்தில் 245 சாலைகளும், அருகிலுள்ள குலுவில் 102 சாலைகளும் அடங்கும். பிலாஸ்பூர், ஹமீர்பூர், உனா மற்றும் சோலன் மாவட்டங்களில் குடியிருப்பு நிறுவனங்கள் தவிர, கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே மாநிலத்தின் இரண்டு முதல் ஏழு மாவட்டங்களில் ஒருசில இடங்களில் ஆகஸ்ட் 30 வரை கனமழை பெய்யும் என்று உள்ளூர் வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி, மாநிலத்தில் மொத்தம் 941 மின் விநியோக மின்மாற்றிகள் மற்றும் 95 நீர் வழங்கல் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

சுதர்சன் ரெட்டி மீதான விமர்சனம்! அமித் ஷாவுக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் கண்டனம்!

பருவமழை தொடங்கிய ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 24 வரை, மாநிலத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் 155 பேர் பலியாகியுள்ளனர். 37 பேர் காணாமல் போயுள்ளனர் என்று மாநில அவசரகால செயல்பாட்டு மையம் கூறியுள்ளது. இதுவரை 77 திடீர் வெள்ளங்கள், 40 மேக வெடிப்புகள் மற்றும் 79 பெரிய நிலச்சரிவுகளை மாநிலம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை தொடர்பான சம்பவங்களில் ஹிமாச்சலப் பிரதேசம் ரூ.2,348 கோடி அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளது என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Between June 20, the onset of monsoon, and August 24, at least 155 people have died in Himachal Pradesh in rain-related incidents, while 37 have gone missing.


மோடியின் பட்டப்படிப்பு விவகாரம்: உத்தரவை ரத்து செய்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பு!

பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை வெளியிட வேண்டும் என்று தில்லி பல்கலைக்கழகத்துக்கு, மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை தில்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.தில்லி பல்கலைக்கழகத... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருடன் ஃபிஜி பிரதமர் சந்திப்பு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ஃபிஜி நாட்டின் பிரதமர் சித்திவேணி லிகாமமதா ரபூகா இன்று(ஆக. 25) சந்தித்து பேசினார். தில்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் (ராஷ்திரபதி பவன்) இந்தச் சந்திப்பு நடைப... மேலும் பார்க்க

உத்தரகண்ட்: தொடரும் நிலச்சரிவுகளால் தேசிய நெடுஞ்சாலைகள் மூடல்!

உத்தரகண்ட்டில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. யமுனோத்ரி, கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலைகளில் நிலச்சரிவால் போக்குவரத்து தடைபட்டு உள்ளது. நலூனா பகுதியருகே ஏற்பட... மேலும் பார்க்க

தசரா விழாவுக்கு புக்கர் பரிசு வென்ற முஸ்லிம் எழுத்தாளருக்கு அழைப்பு: பாஜக கண்டனம்!

உலகப் புகழ் பெற்ற மைசூரு சாமுண்டீஸ்வரி திருக்கோவிலில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும் தசரா விழாவில் புக்கர் பரிசு வென்ற முஸ்லிம் எழுத்தாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு கர்நாடக பாஜக தரப்பிலிரு... மேலும் பார்க்க

காஷ்மீர்: எல்லைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாட்டம் - தீவிர தேடுதல் பணி!

ஜம்மு - காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாட்டம் எதிரொலியாக அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.ஜம்மு - காஷ்மீரில் உரி பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமா... மேலும் பார்க்க

பஞ்சாபில் இலவச ரேஷனை நிறுத்த மத்திய அரசு சதி: பகவந்த் மான்

பாஜக தலைமையிலான மத்திய அரசு மாநிலத்தில் 55 லட்ச மக்களுக்கு இலவச ரேஷனை நிறுத்தச் சதி செய்வதாக பஞ்சாப் முதல்வர் பகந்த் மான் குற்றம் சாட்டினார். பஞ்சாப் மக்களுக்கு எழுதிய எழுத்துப்பூர்வ செய்தியில், மாநில... மேலும் பார்க்க