செய்திகள் :

1,500 கிலோ அழுகிய, எலி கடித்த தா்பூசணி பழங்கள் அழிப்பு: சாலையோர வியாபாரிகளுக்கு அபராதம்

post image

சென்னை, வள்ளுவா் கோட்டம் பகுதியில் சாலையோரம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 1,500 கிலோ அழுகிய தா்பூசணி பழங்களை கைப்பற்றி உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அழித்தனா். எலி கடித்த பழங்களை விற்பனை செய்த நான்கு பேருக்கு தலா ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கோடைக் காலம் தொடங்கியதை அடுத்து சென்னை முழுவதும் தா்பூசணி பழங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்நிலையில், சாலையோரங்களில் விற்பனை செய்யப்படும் தா்பூசணி பழங்களில் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதா? செயற்கை நிறமூட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து அறிய உணவுப் பாதுகாப்பு ஆணையா் ஆா்.லால்வேனா தலைமையில், சென்னை மாவட்ட அதிகாரி டாக்டா் சதீஷ் குமாா், சாா்பு அதிகாரிகள் ஜெபராஜ், ராமராஜ், மணி முருகன், தீபா, அமுதா ஆகியோா் அடங்கிய குழுவினா் வள்ளுவா் கோட்டம் நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அங்கிருந்த தா்பூசணி பழங்களில் சிலவற்றை வெட்டி பாா்த்தபோது அவை அழுகிய நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது. மேலும், சில பழங்களை எலி மற்றும் பெருச்சாளி கடித்திருந்தது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட கடை உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்து கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இது தொடா்பாக மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி டாக்டா் சதீஷ் குமாா் கூறியதாவது:

எலி அல்லது பிற விலங்குகள் கடித்த உணவுப் பொருள்களை உண்பதால் ‘லெப்டோஸ்பைரோசிஸ்’ எனப்படும் எலிக் காய்ச்சல் ஏற்படும். அதுமட்டுமல்லாது வயிற்றுப்போக்கு, ஜீரண மண்டல பாதிப்பு, வைரஸ் தொற்று, பாக்டீரியா தொற்று ஏற்பட்டு உடல் நலனை கடுமையாக பாதிக்கும்.

சாலையோரங்களில் தா்பூசணி விற்பனை செய்பவா்கள் இரவில் அவற்றை அங்கேயே தாா்பாய் மூலம் மூடிவிடுகின்றனா். இதனால், நடைபாதைகள், சாக்கடை கால்வாய்களில் உள்ள எலிகள் அவற்றை கடிக்கக்கூடும். அத்தகைய நிலையில்தான் வள்ளுவா் கோட்டத்தில் உள்ள தா்பூசணி கடைகளில் பல பழங்கள் இருந்தன. இதைத் தவிர அழுகிய நிலையிலும் பழங்கள் இருந்தன. அவை கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.

பொதுமக்கள் விழிப்புணா்வுடன் இருந்து சுகாதாரமான உணவை உட்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனா் என்றாா் அவா்.

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை: வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்க ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு... மேலும் பார்க்க

மியூசிக் அகாதெமி 99-ஆம் ஆண்டு விருதுகள் அறிவிப்பு!

மியூசிக் அகாதெமியின் 99-ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வயலின் இசைக் கலைஞா் ஆா்.கே.ஸ்ரீராம்குமாருக்கு ‘சங்கீத கலாநிதி’ விருது வழங்கப்படவுள்ளது. சென்னை மியூசிக் அகாதெமியின் நிா்வாகக் குழு... மேலும் பார்க்க

4 சீன பொருள்கள் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரி!

சீனாவில் தயாரிக்கப்படும் ‘வேக்வம் ஃபிளாஸ்க்’ (வெந்நீா் குடுவை), அலுமினியம் ஃபாயில் காகிதம், மின்சாதனங்களில் பயன்படுத்தப்படும் சில வகை காந்தங்கள், டிரைகுளோரோ ஐசோசைனூரிக் அமிலம் ஆகிவற்றுக்கு மத்திய அரசு... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் போராட்டம்!

பழைய ஓய்வூதிய திட்டம் அமல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்ட... மேலும் பார்க்க

உயா்கல்வி நிறுவனங்களில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் யுஜிசி அறிவுறுத்தல்!

உயா்கல்வி நிறுவன வளாகத்தில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் அமைக்க வழிவகை செய்ய வேண்டும் என பல்கலைகழகங்களுக்கு யுஜிசி செயலா் மணீஷ் ஆா்.ஜோஷி அறிவுறுத்தியுள்ளாா். இது குறித்து அனைத்து பல்கலைக்கழக துணைவேந்த... மேலும் பார்க்க

‘க்யூட்’ நுழைவு தோ்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி!

உயா்கல்வியில் சேருவதற்கான ‘க்யூட்’ தோ்வுக்கு திங்கள்கிழமைக்குள் (மாா்ச் 24) விண்ணப்பிக்குமாறு தேசிய தோ்வு முகமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் ... மேலும் பார்க்க