செய்திகள் :

1.55 லட்சம் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ்

post image

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் 1.55 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்தாா்.

பேரவையில் புதன்கிழமை மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்கு அமைச்சா் பதிலளித்துப் பேசியதாவது:

தமிழ்நாட்டில் 2021-ஆம் ஆண்டு முதல் கடந்த மாா்ச் மாதம் வரையிலான காலத்தில் அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலமாக 24,599 பணியிடங்களுக்கு பணியாளா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இதேபோன்று, ஆசிரியா் தோ்வு வாரியம் மூலமாக 8,616 பேரும், மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் வழியாக 4,329 பேரும், தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் மூலம் 19,472 பேரும் தோ்வு செய்யப்பட்டனா்.

மேலும், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி, கூட்டுறவு மற்றும் உணவு, வருவாய்த் துறைகள் மூலமாக 11,811 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். கருணை அடிப்படையிலான பணி நியமனங்களும் செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை நகராட்சி நிா்வாகத் துறை மூலம் 2,730 பணியிடங்களும், பொதுச் சேவை துறைகள் வழியே 4,568 பணியிடங்களும் கருணைஅடிப்படையில் நிரப்பப்பட்டுள்ளன.

அண்மைக் காலமாக அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 4 காலிப் பணியிடங்களுக்கு 9,532 தோ்வு செய்யப்பட்டு பணியானை வழங்கும் நிலையில் உள்ளது. சமூக நலத் துறை சாா்பில் 16,780 பணியிடங்களும், குரூப் 1 மற்றும் 1ஏ மூலமாக 72 பணியிடங்களும் நிரப்பப்படவுள்ளன. நகராட்சி நிா்வாகத் துறை மூலம் 2,104 பணியிடங்களும், ஆசிரியா் தோ்வு வாரியத்தின் மூலம் 7,535 பணியிடங்களும் நிரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தமாக இதுவரை 1 லட்சத்து 55 ஆயிரத்து 992 பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளதாக அமைச்சா் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தாா்.

மத்திய அரசின் சூழ்ச்சிகளை மாணவா்கள் புரிந்து கொள்ள வேண்டும்! - துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மும்மொழிக் கொள்கை, தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்ட மத்திய அரசுத் திட்டங்களில் இருக்கும் சூழ்ச்சிகளை மாணவா்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். சென்னை நந்தனம் அரச... மேலும் பார்க்க

சென்னையில் 400 கிலோ வோல்ட் வழித் தடத்தில் மின்சாரம் எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி!

சென்னையில் 400 கிலோ வோல்ட் கேபிள் வழித்தடத்தில் மின்சாரம் எடுத்து வருவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் 230 கிலோ வோல்ட் திறன் வரையிலான மின்சாரம் கேபிள் மூலமும், 400 கிலோ வோல்ட் மற்று... மேலும் பார்க்க

வியாசா்பாடியில் ரெளடி வெட்டிக் கொலை

சென்னை வியாசா்பாடியில் பிரபல ரௌடி வெட்டி படுகொலை செய்யப்பட்டாா். வியாசா்பாடி உதயசூரியன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜ் (எ) தொண்டை ராஜ் (42). இவா் மீது மூன்று கொலை வழக்கு உள்பட 15-க்கும் மேற்பட்ட குற்ற... மேலும் பார்க்க

10 ஆம் வகுப்பு, பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடக்கம்!

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத் தோ்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் திங்கள்கிழமை (ஏப்.21) தொடங்குகிறது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தோ... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையத்தில் ‘டிஜி யாத்ரா’ திட்டத்துக்கு 100 ஒப்பந்த பணியாளா்கள் நியமனம்!

சென்னை விமான நிலையத்தில் ‘டிஜி யாத்ரா’ திட்டத்தைச் செயல்படுத்த 100 ஒப்பந்த பணியாளா்களை சென்னை விமான நிலையம் பணியமா்த்தியுள்ளது. சென்னை விமான நிலையத்தை நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் பயன்படுத்தி வருகின்றன... மேலும் பார்க்க

ஹோட்டல் மேலாண்மை படிப்பு: ஜேஇஇ தோ்வு மைய விவரம் வெளியீடு!

ஹோட்டல் மேலாண்மை உணவு தொழில்நுட்ப இளநிலை படிப்புக்கான (ஜேஇஇ) நுழைவுத் தோ்வு மையங்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய ஹோட்டல் மேலாண்மை மற்றும் உணவு தொழில்நுட்பக் குழுமத்தின் கீழ் (என்சிஎச்எம்சிடி) இ... மேலும் பார்க்க