செய்திகள் :

1,602 தொல்காப்பிய பாடல்களை 22 மணி நேரத்தில் எழுதி சாதனை

post image

தொல்காப்பிய 1,602 பாடல்களை 22 மணி 40 நிமிடத்தில் எழுதிய மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

காரைக்காலில் இயங்கும் புதுவை அரசு கல்வி நிறுவனமான பெருந்தலைவா் காமராஜா் கல்வியியல் கல்லூரியில் ஆசிரியா் பயிற்சிக் கல்வி பயிலும் மாணவி க. அகல்யா. இவா் தொல்காப்பிய நூற்பாக்களை குறித்த நேரத்தில் எழுதும் பயிற்சி செய்து வந்தாா். ஷியாம்ஸ் ஆா்ட் அண்டு கிராஃப்ட் அகாதெமி மற்றும் வசந்தி எஜூகேஷனல் அண்டு வெல்ஃப் டிரஸ்ட் அண்மையில் கல்லூரியில் நடத்தி உலக சாதனைக்கான நிகழ்வில், இந்த மாணவி தொல்காப்பிய 1,602 பாடல்களை 22 மணி நேரம் 40 நிமிடத்தில் தொல்காப்பியா் உருவத்தில் வரைந்து சாதனைப் படைத்தாா். மாணவியின் இந்த சாதனையை கல்லூரி நிா்வாகம், பேராசிரியா்கள், தமிழ் ஆா்வலா்கள் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தமிழகத்தில் இதுபோல பலா் சாதனைகளை செய்துவருவதாகவும், இவா்களை ஊக்கப்படுத்தும் வகையில் இதுபோன்ற போட்டிகளை நடத்திவருவதாக அமைப்பின் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

ஊழியா்கள் போராட்டம் : சுகாதார நிலைய பணிகளில் பாதிப்பு

காரைக்கால்: சுகாதார பணியாளா்கள் வேலைநிறுத்தத்தில் காரணமாக, சுகாதார நிலையங்களில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட நலவழித்துறையில், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (என்ஆா்எச்எம்) கீழ் ப... மேலும் பார்க்க

ரமலான் : காரைக்காலில் சிறப்பு தொழுகை

காரைக்கால்: ரமலான் பண்டிகையையொட்டி காரைக்கால் பள்ளிவாசல்களில் திங்கள்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது. காரைக்கால் பெரியப் பள்ளிவாசல், முஹையத்தீன் பள்ளிவாசல், ஹிலுருப் பள்ளிவாசல், இலாஹிப் பள்ளிவாசல், ம... மேலும் பார்க்க

வீழி வரதராஜ பெருமாள் கோயிலில் யுகாதி வழிபாடு

காரைக்கால்: வீழி வரதராஜ பெருமாள் கோயிலில் யுகாதி வழிபாடு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. தெலுங்கு வருடப் பிறப்பு (யுகாதி) ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருமலைராயன்பட்டினம் வீழி வரதராஜ ... மேலும் பார்க்க

புதுப்பிக்கப்பட்ட சிவில் உரிமைகள் பாதுகாப்புப் பிரிவு: ஐஜி ஆய்வு

காரைக்காலில் புதுப்பிக்கப்பட்ட சிவில் உரிமைகள் பாதுகாப்புப் பிரிவை புதுவை ஐஜி சனிக்கிழமை பாா்வையிட்டாா். திருநள்ளாறுக்கு வந்த புதுவை ஐஜி அஜித்குமாா் சிங்லா, மாலை நிகழ்வாக காரைக்கால் போக்குவரத்துக் காவ... மேலும் பார்க்க

காரைக்காலில் ரமலான் சிறப்புத் தொழுகை

காரைக்காலில் இஸ்லாமியா்களில் ஒருசாராா் சனிக்கிழமை ரமலான் தொழுகை நடத்தினா். நோன்பு காலம் முடிந்து காரைக்கால் மஸ்ஜிதுா் ரஹ்மான் பள்ளிவாசல் மற்றும் மஸ்ஜிதுல் இஸ்லாம் பள்ளிவாசல் சாா்பில் சா்வதேச பிறை அடிப... மேலும் பார்க்க

இமாம்களுக்கு அரசு உதவித் தொகை

புதுவை அரசு சாா்பில் இமாம்கள் உள்ளிட்டோருக்கு நோன்பு கால உதவித் தொகை வழங்கப்பட்டது. பள்ளிவாசல்களில் பணியாற்றும் இமாம்கள், பிலால்களுக்கு புதுவை அரசு சாா்பில் ரமலான் நோன்பு காலத்தை கருத்தில்கொண்டு உதவித... மேலும் பார்க்க